யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
என்றார் பாரதியார். பல மொழிகளைக் கற்று உணர்ந்த பாரதியால், தமிழ் மொழியின் இனிமையை உணர முடிந்தது.
தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகளை ஒன்று முதல் எட்டு வரை பார்ப்போமா?
'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' உதித்த மூத்த மொழி நம் தமிழ் மொழி.
கி.மு 200 ஆம் ஆண்டிற்கு முன்னரேயே இலக்கணத்திற்கு என தனி நூல் (தொல்காப்பியம்) கொண்ட ஒரே மொழி நம் தமிழ் மொழி தான்!
இயல் என்பது எழுத்து மற்றும் பேச்சில் பயன்படுத்தப்படும் தமிழ். இசை என்பது பண் இசைத்துப் பாடப்படும் தமிழ். நாடகம் என்பது கூத்து மற்றும் ஆடலால் உணர்த்தப்படும் தமிழ்.
பண்டைய தமிழர் ஒவ்வொரு நாளையும், ஆண்டையும் ஆறு பொழுதுகளாய்ப் பிரித்திருந்தனர்.
ஒரு நாளில் வரும் ஆறு பொழுதுகள் (சிறு பொழுது):
ஒரு ஆண்டில் வரும் ஆறு பொழுதுகள் (பெரும்பொழுது):
தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகளை ஒன்று முதல் எட்டு வரை பார்ப்போமா?
ஒரே மொழி:
'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' உதித்த மூத்த மொழி நம் தமிழ் மொழி.
கி.மு 200 ஆம் ஆண்டிற்கு முன்னரேயே இலக்கணத்திற்கு என தனி நூல் (தொல்காப்பியம்) கொண்ட ஒரே மொழி நம் தமிழ் மொழி தான்!
இரு வாழ்க்கை:
தமிழர் தன் வாழ்க்கையை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்து வாழ்ந்தனர். இல்லத்தில் இருக்கும் அன்பும், காதலும் இயைந்த வாழ்க்கை அக வாழ்க்கை. வெளியே நடக்கும் வீரம், கொடை முதலிய கொண்ட வாழ்க்கை புற வாழ்க்கை.
முத்தமிழ்:
இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று களங்களிலும் தமிழை வளர்த்தனர் தமிழர்.இயல் என்பது எழுத்து மற்றும் பேச்சில் பயன்படுத்தப்படும் தமிழ். இசை என்பது பண் இசைத்துப் பாடப்படும் தமிழ். நாடகம் என்பது கூத்து மற்றும் ஆடலால் உணர்த்தப்படும் தமிழ்.
நான்மறை:
அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை நான்கு உறுதிப் பொருட்களையும் அடையும் வகையில் வாழ்ந்தனர் தமிழர் ஆகும்.
ஐந்நிலம்:
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்களிலும் தமிழ் வளர்ந்தது.
ஆறு பொழுதுகள்:
பண்டைய தமிழர் ஒவ்வொரு நாளையும், ஆண்டையும் ஆறு பொழுதுகளாய்ப் பிரித்திருந்தனர்.
ஒரு நாளில் வரும் ஆறு பொழுதுகள் (சிறு பொழுது):
காலை | 6 முதல் 10 மணி வரை |
நண்பகல் | 10 முதல் 14 மணி வரை |
எற்பாடு | 14 மணி முதல் 18 மணி வரை |
மாலை | 18 மணி முதல் 22 மணி வரை |
யாமம் | 22 மணி முதல் 2 மணி வரை |
வைகறை (வைகுறு விடியல்) | 2 மணி முதல் 6 மணி வரை |
ஒரு ஆண்டில் வரும் ஆறு பொழுதுகள் (பெரும்பொழுது):
இளவேனில் | சித்திரை, வைகாசி | |
முதுவேனில் | ஆனி, ஆடி | |
கார் | ஆவணி, புரட்டாசி | |
கூதிர் (குளிர்) | ஐப்பசி, கார்த்திகை | |
முன்பனி | மார்கழி, தை | |
பின்பனி | மாசி, பங்குனி |
ஏழு திணை:
தமிழர் தன் போர் வாழ்க்கையை ஏழு திணைகளாகப் பிரித்தனர். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகியவை ஆகும்.
எட்டு மெய்ப்பாடுகள்:
தமிழர் தம் உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை எட்டு பெய்ப்பாடுகளாய்ப் பிரித்தனர். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டு உணர்ச்சிகளையும் பல இலக்கியங்களில் வழி காணலாம்!
தன் கல்லறையின் மீது "ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுத விருப்பம் கொண்டார் ஜி.யூ. போப். வேறு எந்த மொழியின் மீதும் யாரும் அவ்வளவு பற்று கொண்டதாய் வரலாறு இல்லை.
அத்தகு சிறப்பு மிக்க தமிழ்மொழியினை நம் தாய் மொழியாய்க் கொள்வதற்கு மிகவும் பெருமையாய் இருக்கிறது!
அத்தகு சிறப்பு மிக்க தமிழ்மொழியினை நம் தாய் மொழியாய்க் கொள்வதற்கு மிகவும் பெருமையாய் இருக்கிறது!
![]() |
![]() |
![]() |
![]() |
மடல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்
பாரதியாரின் கவிதையில் தொடங்கி தமிழ் மொழியின் சிறப்புகளையும், பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்..!! வாழ்த்துகள்..!!
பதிலளிநீக்குதமிழுணர்வு கொண்ட ஒவ்வொரு தமிழனும் ஜி.யூ. போப் போன்றே தமிழ்ப்பற்றுக்கொண்டு, அத்தகைய எண்ணங்களை தம்முள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும்.. !!! தமிழனாக பிறந்ததிற்குரிய அடையாளமாக அந்த எண்ணங்கள் மனதில் வேறூன்ற வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி அருண்!!!
தமிழ் வாழ்க..! தமிழ் வளர்க..!!!
நன்றி நண்பரே..
நீக்குதமிழ் என்றும் வளரும்!
தமிழை பற்றிய சிறப்புகள்.......
பதிலளிநீக்குதலைப்பும், கருத்தும் விளக்கங்களும் அருமை அருண்.....
தொடர்க....... தமிழ் பெருமைகளை
நன்றி அண்ணே..
நீக்குmadhippirkkuriya avizhmadalukku en vanakkam thangalin thamizh padhivu nandraga irundhdhadhu nandri
பதிலளிநீக்குsurendran
தன் கல்லறையின் மீது "ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுத விருப்பம் கொண்டார் ஜி.யூ. போப். வேறு எந்த மொழியின் மீதும் யாரும் அவ்வளவு பற்று கொண்டதாய் வரலாறு இல்லை.
பதிலளிநீக்குபகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி அக்கா
நீக்குதமிழ் பற்றிய தகவல்கள் அருமையாக தொகுத்து தந்தீர்கள். நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஜி.யூ. போப்...,
பதிலளிநீக்குநிறைய பேறு மறந்த பெயர் ..., நினைவுபடுத்தியமைக்கு நன்றி நண்பரே ..!
//ஜி.யூ. போப்...,
நீக்குநிறைய பேறு மறந்த பெயர் //
உண்மை தான்... அந்த பெயரைச் சொன்னால், அவர் எத்தனையாவது போப் என்று கேட்பவர்களும் உண்டு.
நன்றி நண்பரே!
நீக்குமிகவும் அருமை சகோ.
பதிலளிநீக்குதமிழுக்கு நான் செய்யும் சிறு தொண்டு இந்த பதிவின் லிங்க் ய் எனது தளத்திலும் இட்டுள்ளேன்.நன்றி நண்பா
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்குகாலம் தாழ்த்திய மறுமொழிக்கு மன்னிக்கவும்!