அன்பு நண்பர்களே, எனது பிறந்த நாளான 13 ஜூலை 2011 அன்று இந்த வலைப்பூவினைத் துவங்கினேன். ஏதோ ஓர் ஆர்வத்தில் துவங்கிய எனது வலைப்பூவில் இதோ எனது ஐம்பதாம் பதிவினை (50*) எழுதும் பொன்னான தருணம் வந்துவிட்டது. எனது பணிசூழல் காரணமாகவும், தமிழக மின்சூழல் காரணமாகவும் அடிக்கடி பதிவு எழுதுவதற்கு விடுப்பு எடுக்க வேண்டி வந்தது. எப்போதாவது எழுதும் எனக்கு பல பதிவர்கள் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தனர். வலைப்பூக்களைத் தொடுத்து உருவாக்கப்பட்ட வலைச்சரத்தில் எனது மூன்று பதிவுகள் இடம்பெற்றுள்ளன. கடவுளே! - அறிமுகம் செய்தவர்: சகோதரி ' குட்டி சுவர்க்கம்' ஆமினா [ வித்தியாசமாய் ] பயணச்சீட்டால் பயங்கர பல்பு வாங்கிய பிரபல பதிவர் - அறிமுகம் செய்தவர்: நண்பர் வீடு சுரேஷ் குமார் [ பதிவுலகில் விழிப்புணர்வு! ] வண்ணங்களும் பெண்களும் - அறிமுகம் செய்தவர்: கீதமஞ்சரி அக்கா [ ஆசை அன்பு இழைகளினாலே... ] எனது தானியக்க வங்கி இயந்திரத்தில் திருடர்களை தவிர்ப்பது எப்படி? பதிவினைப் பாராட்டி நண்பர் ' வீடு சுரேஷ் குமார் ' அவர்கள் எனக்கு லிப்ஸ்டர் பிளாக் (L...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ