நம்பாதீங்க...... (பகுதி 1) இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது.. இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு... மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது.. ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்... மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன... இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு.. பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்... பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!! பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதியனவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன.. அவற்றைப் பற்றி அலசுவதே இந்த (சிறு) தொடரின் நோக்கம்.. தீப ஒளித்திருநாளாம் தீபாவளியை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருப்பீர்கள்!! நேற்று (26/10/2011) பலரது அஞ்சலுக்கும் (அல்லது முகநூல்/ ட்விட்டர்) ஒரு படம் வந்திருக்கும்.. இந்தியா தீபாவளி இரவினில் எப்படி ஒளிர்கிறது என்று நாசா எடுத்த புகைப்படம்: சரி, ...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ