10 டிசம்பர் 1930 ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.. அன்று நோபல் பரிசு வழங்கும் தினம். அப்போது, அங்கு ஒரு இந்தியரும், அவரது மனைவியும் வந்து சேர்ந்தனர்.. வந்திருந்த பலரும் அவர் ஏதோ இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தார் என்றே நினைத்திருந்தனர்.. ஆனால்... நடந்ததோ வேறு.. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு அவர் அழைக்கப்பட்டார்.. வந்திருந்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். பின்னே, மேலை நாட்டைச் சேராத ஒருவர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறுவதென்றால் சும்மாவா?!! அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்கு நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரே அவர் தான் !!! அவர் தான் சர்.சி.வி ராமன்.. அந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படவர்களில் பலரும் அணுக்கள் தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர் இவர் ஒருவர் தான்.. அது (இன்றும் தான்), அணுக்கள் ஆபத்தானவை என்று அறியப்பட்ட காலம். நோபல் அறக்கட்டளையின் கொள்கைப்படி, நோபல் பரிசு அமைதியான வழியை நாடும் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட வேண்டும். அத்துடன், கண்டுபிடி...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ