முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மாணவர்களின் பெற்றோருக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களின் பெற்றோருக்கு..

நண்பர்களுடன் ஒன்றாய் அமர்ந்து அரட்டையும் கும்மாளமும் கலந்து நம் அணிக்குக் கைத்தட்டி எதிர் அணிக்கு நகைத்தட்டி ஒவ்வொரு பந்தாய் விவாதிப்பதற்கு மாணவப் பருவம் தவிர்த்து வேறுபருவம் உலகினில் உண்டோ? அதைத் தடுத்தல் நன்றோ? ஆட்டக் காட்சியை பார்க்கவிடில் விவாதிக்கும் பொருள் எதில்? சிறு வாதங்களைத் தடைசெய்வதாலே குழுவிவாதத்தில் பலர் தோற்பதே!! மாணவனாய் இருந்தது விடவே நல்மாதவம் செய்து இடனுமே. மாணவப் பருவம் முடித்து பசிக்கு வேலை எடுத்து தனக்கென வாழ்க்கை அமைத்து பருவம் முற்றி காய்த்து வேலைப் பளுவில் மூழ்கியபின் மட்டை பந்தைத் தான் அதைப் பார்க்கத் தான் நமக்கு நேரம் ஏது? மாணவப் பருவ ஆர்வங்கள் பிறிதொரு நாளில் என்றேனும் கிட்டுமா? மாணவப் பருவ இன்பங்கள் அன்றே நுகரும் பண்டங்கள் பிறிதோரு நாளில் எட்டா.. என்றும் எளிதில் கிட்டா பருவத்திலே பயிர் செய்வோம்.. அப்போதே அறுவடையும் செய்வோம்.. அனைவரும் இதைச் சிந்தியுங்கள் உலகத்தை ஒன்றாய் சந்தியுங்கள் -இப்படிக்கு  மாணவப் பருவத்தைப் படிப்பிலேயே தொலைத்த பின் மீண்டும் கிட்டாதா என்று ஏங்குபவரில் ஒருவன்..