முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்.. 

" ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?"

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!"

"தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?"

எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!!
பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்...
அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!!


இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!!

**************


2004 ஆம் ஆண்டு..
 
பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி.


"பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்" 


"நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கிறோம்" 


அடுத்த பொதிகை நிகழ்ச்சியிலேயே, மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என்று அருமையாக விளக்கினார்கள்.


அன்று மின்னஞ்சல் உருவாக்க வழி கேட்டவர் இன்று கணிணித் துறையில் பெரிய புலியாக இருக்கிறார்.   பலருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் கணிணி மெம்பொருட்களைப் பற்றி தனது தளத்தில் விளக்கி வருகிறார். திறமூல சமூகத்திலும் ஆர்வம் கொண்டு இருக்கிறார்.

அவர் வேறுயாருமல்ல... நமது "தமிழ் CPU " ந.ர.செ.ராஜ்குமார்! 

****************
இப்ப இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்!!


2003 ஆம் ஆண்டு

"ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  கவனமா கேட்டுக்க!!!"
இத நான் சொல்லலீங்க..  எங்க பக்கத்து வீட்டு  அக்கா சொன்னாங்க..
அவங்க அப்பவே MBA முடிச்சு ஒரு பேங்க்ல வேலை செய்துகிட்டு இருந்தாங்க!
 
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்னால்,  மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேர்த்து விடும் முயற்சியில்  தீவிரமாக இருந்தார் என் அப்பா.

அப்போது தான் முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைய விண்ணப்பங்கள் (Online Application) வந்த நேரம். அதில் விண்ணப்பிக்க கட்டாயம் மின்னஞ்சல் முகவரி வேண்டும். அப்படித் தான் எனக்கு மின்னஞ்சல் முகவரிக்கான தேவை ஏற்பட்டது.

அப்போது தான் நான் அக்காவின் உதவியை நாடினேன். அவர் பொறுமையாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கும் முறையினைச் செயல் வடிவத்தில் காட்டினார். அந்த செயலாக்கத்திலேயே எனது முதல் மின்னஞ்சல் முகவரியும் உருவானது. (அப்போது யாஹூ தான் பிரபலம் எனவே, அதில் தான் உருவானது)


"தம்பி.. ஈமெயில் ஐடி கிரியேட் பண்றது முக்கியமில்ல. பாஸ்வேர்ட மறக்காம வெச்சுக்கணும்" என்றார். நானும் சரி என்பது போல் தலையாட்டினேன்.

அதன் பிறகு, நான் இணையத்தில் விண்ணப்பிக்காமல் நேரடியாக விண்ணப்பித்தது வேறு விசயம்!
*********

சில மாதங்கள் கழித்து..

கல்லூரியில் சேர்ந்தாயிற்று. மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பிரவுசிங் சென்டர் போனோம்.


"யோவ் ஆளுங்க.. நீ மெயில் எல்லாம் செக் பண்ண மாட்டியா?"
"இதுவரைக்கும் பண்ணதில்ல"

"அடிக்கடி செக் பண்ணிப் பார்க்கணும் மச்சான்!! சரி, உன் மெயில் ஐடி, பாஸ்வேர்ட்  சொல்லு"
"பாஸ்வேர்ட் யாருக்கும் சொல்ல மாட்டேன்.. வேண்டும்னா நானே அடிக்கிறேன்"


"சரி..போ!! உன் மெயில் ஐடி சொல்லு"

"அப்படின்னா??"


அவிழ்மடல்

கருத்துகள்

  1. ஹி ஹி ஹி .., உங்கமேல தப்பில்லை அவங்க பாஸ்வேர்ட் தானே பத்திரமா வச்சுக்க சொன்னாங்க ஈமெயில் ஐடியை சொல்லலையே ஹி ஹி ஹி ..!

    பதிலளிநீக்கு
  2. சூப்பர்... மாமு.. நல்லா சிரிச்சுட்டேன்.. எனக்கு இருந்த டென்சனெல்லாமே குறைஞ்சிடுச்சு....!!!!!

    ஆளுங்க.. இப்படி கூட எழுதுவாரா???....நான் அவருக்கு தொழில்நுட்பம் மட்டும்தான் தெரியும்னு நெனைச்சேன்... !!!

    பதிவோட ஹைலைட்டே இதுதான்... "சரி..போ!! உன் மெயில் ஐடி சொல்லு"

    "அப்படின்னா??"



    பதிவை முழுசும் படிச்சாதான் இந்தப் பதிவிற்கான பலனும் கிடைக்கும்...!!!

    பதிலளிநீக்கு
  3. என்னை ஏன் பாஸ் இதில இழுக்குறீங்க? கணினித் துறை புலின்னு சொல்றதுக்கு பதில் புளின்னு வேணும்னா திட்டிக்கோங்க. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா தாங்க... பதிவு எழுதும் போது உங்க ஞாபகம் வந்தது.. அதான்!

      நீக்கு
  4. sureshkumar@rediffmail.com இதுதான் என் முதல் மெயில் ஐடி....ஜிமெயில் வந்து பல மெயில் காலியாகிருச்சு!

    பதிலளிநீக்கு
  5. கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும