முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா - 50 வது பதிவு

அன்பு நண்பர்களே,


எனது பிறந்த நாளான 13 ஜூலை 2011 அன்று இந்த வலைப்பூவினைத் துவங்கினேன்.  ஏதோ ஓர் ஆர்வத்தில் துவங்கிய எனது வலைப்பூவில் இதோ எனது ஐம்பதாம் பதிவினை (50*) எழுதும் பொன்னான தருணம் வந்துவிட்டது.
 எனது பணிசூழல் காரணமாகவும், தமிழக மின்சூழல் காரணமாகவும் அடிக்கடி  பதிவு எழுதுவதற்கு விடுப்பு எடுக்க வேண்டி வந்தது. எப்போதாவது எழுதும் எனக்கு பல பதிவர்கள் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தனர்.

வலைப்பூக்களைத் தொடுத்து உருவாக்கப்பட்ட வலைச்சரத்தில் எனது மூன்று பதிவுகள்  இடம்பெற்றுள்ளன.
 எனது தானியக்க வங்கி இயந்திரத்தில் திருடர்களை தவிர்ப்பது எப்படி? பதிவினைப் பாராட்டி நண்பர் 'வீடு சுரேஷ்  குமார்' அவர்கள் எனக்கு லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) என்கிற விருதினை அளித்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இவற்றை எனது எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்கிறேன்.  இவையே ஊக்கம் கொடுத்து மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டுகிறன. 


தொடர்ந்து எனக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

வலைப்பூ துவங்கும் போது, வலைப்பூவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது,  எனது மனதில் பல பெயர்கள் தோன்றின.

 எனது அம்மா சொன்ன பெயரான "அவிழ்மடல்" என்னும் பெயர் தான் எனது  வலைப்பூவில் நீங்காமல் நின்று விட்டது.
.......................................................................................................................................................................................................
பூமிக்கு வரும் முன் ஒரு குழந்தை இறைவனிடம் கேட்டது: "நாளை நான் பூமிக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால், நான் அங்கு எப்படி வாழ்வேன்?"

"உன் வருகைக்காக அங்கு ஒரு தேவதை காத்துக் கொண்டிருப்பாள். அவள் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார்" என்றார் கடவுள்.

"என்னை யார் காப்பாற்றுவார்?" என்றது குழந்தை.

"அந்த தேவதை எப்போதும் உன்னைக் காத்துக் கொண்டு இருப்பாள். தனது உயிரை விட மேலாக உன்னை கருதுவாள்" என்றார் கடவுள்.

"தேவலோகத்தில் இருந்த மகிழ்ச்சி அங்கு எப்படி கிடைக்கும்?" என்றது குழந்தை.

"உன் தேவதை உனக்காக பாடுவாள். அவள் அன்பின் கதகதப்பினால் நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாய்"  என்றார் கடவுள்.

"ஆனால், பூமியில் உள்ள மொழி எனக்குத் தெரியாதே?" என்றது குழந்தை.

"கவலை வேண்டாம். உன் தேவதை உன்னிடம் அழகிய, இனிய சொற்களால் பேசுவாள். மிக்க அன்புடனும், கனிவுடனும், பொறுமையுடனும் உனக்கு அவர்களது மொழியைக் கற்று தருவாள்" என்றது குழந்தை.

"அப்படியா! எனது தேவதையின் பெயரைச் சொல்லுங்களேன்.. ஆசையாக இருக்கிறது" என்றது குழந்தை.

"நீ அவளை 'அம்மா' என்று அழைப்பாய்" என்றார் கடவுள்.


கடவுள் காட்டிய தேவதையான எனது அம்மாவிற்கு இந்த பதிவினைஅர்ப்பணிக்கிறேன்!!!!!!

கருத்துகள்

  1. தரமான பதிவுகளை எழுதிவரும் நீங்கள் மேலும் நல்ல பதிவுகளை தந்து பதிவுலகில் பெயரோடும் சிறப்போடும் இருக்க வாழ்த்துகிறேன்! வாழத்துகள் நண்பரே!
    அம்மாவை பற்றி சொல்லியது நன்று! தேவதையின் ஆசி மட்டுமல்ல நல்ல நட்புகளின் ஆசியோடு தொடரட்டும் உங்கள் பணி! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  2. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா! அம்மா வைத்த பெயர் அழகாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்... மென்மேலும் சிறந்த பதிவுகள் எழுத வாழ்த்துகிறேன்.

    அம்மா வைத்த அவிழ்மடல் பெயர் அருமை....

    பதிலளிநீக்கு
  4. அட ஐம்பதா ..? பெரிய விஷயம் தான்.., வாழ்த்துக்கள் அண்ணே ..!

    பதிலளிநீக்கு
  5. மே தின வாழ்த்துகள்
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    பதிலளிநீக்கு
  6. congrats for your 50th posting boss ..

    kalakungaa

    from,
    http://tamil.dailylib.com

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பிறந்த திகதியில் தான்(மே-13). மேற்கத்தைய நாடுகள் பலவற்றில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.அவதானித்தீர்களா? அம்மா என்பவள் ஒவ்வொருவருக்கும் அவிழ்மடல் தான். அன்பு என்கின்ற தேன் தர குழந்தைகளுக்காய் மலர்ந்த மடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல தகவல்.. மகிழ்ச்சி!!
      (நான் பிறந்த நாள் ஜூலை 13)

      நீக்கு
  8. வாழ்த்து கூறி கருத்திட்ட வீடு சுரேஸ்குமார், அப்துல் பாசித், தமிழ்வாசி பிரகாஷ், வரலாற்று சுவடுகள், கிரிஷி, மற்றும் தீபிகா ஆகியோருக்கு என் நன்றி!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும