முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் (நம்பாதீங்க - பகுதி 8 )

புராணக்கதைகளில் ராட்சதர்கள் பற்றிய கதைகளைப் படித்திருப்போம். அவர்கள் மனிதர்களை விட மிக உயரமாவும், திடமாகவும் இருந்ததாக இருக்கும். வேதங்கள் அசுரர்களை ராட்சதர்களாக சித்தரிக்கிறன. பீமனின் மகன் கடோத்கஜன் கூட ராட்சதன் தான்..

அப்படிப் பட்ட ராட்சதர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா?அதற்கு எதுவும் ஆதாரம் உண்டா?

இதோ இந்த எலும்பு கூடுகள் உங்களுக்குப் பதில் சொல்லும்!!

                                                                                                                       
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோத்கஜன். இவன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும்
பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று
சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?

கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள்
கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில்
தேசிய புவியியல் ஆய்வு  (National Geographic Channel) நிபுணர்கள் இராணுவத்தின் உதவியுடன் ஒரு பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரதேசம் இராணுவ நியாயாதிக்கத்தின் கீழ் உள்ளதாலேயே இராணுவத்தின் உதவி பெறப்பட்டது.
















இவர்கள் நிலத்துக்கு கீழ் இருந்து மிக மிகப் பெரிய எலும்புக் கூடுகளை
மீட்டனர். இவை கடோத்கஜன் போன்ற அரக்கர்களின் பிரமாண்ட உடலின் எலும்புக்
கூடுகள்தான் என்று இந்நிபுணர்கள் விசுவாசிக்கின்றனர். இந்த இடத்துக்கு
தேசிய புவியியல் (Natgeo)ஆய்வு நிபுணர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என
இந்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.

இது குறித்த தகவல்களை அந்நாட்களில் Hindu Voice பத்திரிகை பிரசுரித்து இருந்தது.



இந்த செய்தி Times of India நாளிதழின் 22 ஏப்ரல் 2004 மும்பை பதிப்பிலும் வெளியானதாம். (தேடினால் கிடைக்கவில்லை)

செய்தி வெளியீடு:
Ghatotkach Skeleton : Mahabhart Bhima's son Found
Archeologists discover remains of a huge human skeleton


இந்த செய்தி தமிழிலும் வெளியாகியுள்ளது:
கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் அதிர்ச்சிப் புகைப்படங்களுடன்


என்னங்க? ஆச்சரியமாக இருக்கா??

ஆனால்.............
 இதெல்லாம் டூப்பு!! போட்டோசாப் தான் டாப்பு!!

உண்மை

பண்டைய காலத்தில் "Mastodon" என்கிற பெரிய யானைகள் (நாம் Mammoth என்று படித்து இருப்போம்!) இருந்தன. அவற்றின் எச்சங்களை (எலும்புகள்) வானில் இருந்து  2000 ஆம் ஆண்டில் எடுத்திருக்கிறார்கள்.



இந்த படத்தைக் கண்டார் கனடாவின் அயர்ன் கைட் (Iron Kite) என்பவர். அதில் யானைக்குப் பதில் மனிதனின் எலும்புகளை மாற்றி Archaeological Anomalies 2 என்கிற புகைப்பட போட்டிக்கு (2003 இல்) அனுப்பி வைத்தார். படம் அந்த போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றது.

அந்த படத்தைப் பார்த்த யாரோ செய்த திருவிளையாடல் தான் இது!!


சரி, முதல் படம் சரி.. மற்றவை??

இரண்டாம் படம் - உருவாக்கியவர்: அனாகின் (Anakinnnn)
மூன்றாம் படம் - உருவாக்கியவர்: அமரன்டோ (Amaranto )
[சடலத்தின் கையில் துப்பாக்கி உள்ளதைக் கவனிக்கவும்]

மூன்று படங்களும் Worth1000 என்கிற தளம் 2003-இல் நடத்திய  Archaeological Anomalies 2 என்கிற போட்டிக்கு அனுப்பப்பட்ட பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவில் கடோத்கஜனாக இருக்கும் இந்த ராட்சத எலும்பு ஒவ்வொரு நாட்டிலும் (கிரேக்கம், மலேசியா, போர்த்துகல், எகிப்து, கென்யா, தென்னாப்பிரிக்கா) அந்த ஊரின் ராட்சதரின் பெயரில் உலாவுகிறது!!!
 
எனவே, இது ஒரு பொய் படம் என்று நேசனல் ஜியாகரபி (National Geography) விளக்கம் கொடுத்துள்ளது:  "Skeleton of Giant" Is Internet Photo Hoax

IronKite அந்த படத்தை உருவாக்க 2 மணி நேரம் தான் பிடித்ததாம்.  ஆனால், இந்த படம் ராட்சதர்களைக் கண்டுபிடித்ததாக 9 வருடங்களாக வலம் வருகிறது.!!



நன்றி: பத்மாசீனிவாஸ், ஹோக்ஸ்லேயர்

நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்




அவிழ்மடல்

கருத்துகள்

  1. நம்ப முடியாத விஷயங்கள்.. படிக்க படிக்க தெளிவாகியது..
    "நம்பாதீங்க" தலைப்பு பொருத்தமே.. அருமையான முயற்சி அருண். தொடருங்க...
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. நம்பி வாசிச்சேன் கடைசில கவுத்துடீங்களே ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் பேர்லயே "நம்பாதீங்க" என்று போட்டிருக்கேனே!!

      நீக்கு
  3. நம்பாதிங்க பகுதியில் உண்மையை சொல்லி நம்ப வச்சுட்டிங்க.....


    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல விளக்கங்கள் ! நம்ப மாட்டேன்க !

    பதிலளிநீக்கு
  5. படித்து கருத்திட்ட தங்கம் பழனி, வரலாற்று சுவடுகள், தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கு என் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நம்புவதற்கு ஒரு கூட்டம் உள்ள வரை இப்படி கட்டுக்கதைகள் வரத்தான் செய்யும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும