முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

தமிழா!!! "இதை நீ படிக்கணும்"... "KOLAVERI song" மாதிரி "PROMOTE" செய்ய வேண்டும்!!! PLEASE!!! முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள்! “ 116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ? ” இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை

பாரதியினைத் தலை வணங்குவோம்!

11 டிசம்பர் 2011 சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும் அளவு தகுதி எனக்கில்லை.  எனவே , அவரது கவிதை  ஒன்றையே இங்கு பதிந்து அவரை  நினைவு கூறுவோம்!! பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது. சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை  அழகாக பாடியுள்ளார் என்று பாருங்கள்.... // வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்       மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம் // மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது??? ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது? பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார் சரணங்கள் 1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி       மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்  

'அம்மா'வுக்கு நேர்ந்த கொடுமை

இது 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மட்டுமே!!!!!!!! தமிழ் மொழியில் "அம்மா" எனும் வார்த்தை மிக முக்கியமானது!! "அம்மா" என்பது தாய்மையின் அடையாளம் மட்டும் அல்ல... அது பெண்மையின், கருணையின் அடையாளமும் தான்.... "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை " என்பது ஆன்றோர் வாக்கு!! இது தமிழர்களாகிய நமக்குத் தெரியும்... ஆனால், கூகிள் ரோபோவுக்குத் தெரியவில்லை.... கூகிளில் (google) அம்மா என்று தமிழில் தட்டச்சு செய்து தேடுங்கள்.. கிடைக்கும் முதல் சில விடைகள் உங்களை அதிர வைக்கும்... தங்கை, அக்கா, அத்தை, பெரியம்மா, சித்தி, அண்ணி என நம் தமிழ் வழக்கில் மதிப்பு மிக்க நிலையில் இருக்கும் அனைத்து பெண் வழிச் சொந்தங்களுக்கும் இதே நிலை தான் !! கூகிள் தற்போது தான் தமிழ் கற்பதாலோ  என்னவோ, பாதுகாப்பான தேடலிலும் (Safe Search) இந்த முடிவுகள் வருகிறன!!! இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு கூகிள் குண்டா என்று அறியேன்.. பி.கு: கூகிள் குண்டு (google bomb) கூகிள் தேடுபொறியில் , ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தட்டச்சு செய்யும் போது, கிடைக்க