முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காக்க காக்க !!!

இன்றைய இணைய உலகில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு தேவையாக மாறி விட்டது. பணம் பெறுதல், காழ்ப்புணர்ச்சி மற்றும் வேறு பல காரணங்களால் பலரது மின்னஞ்சல்கள் களவாடப்படுகிறன (Hack).  அவற்றைத் தடுக்க பல வழிகள் இருந்தாலும், புதிய புதிய வழிமுறைகளால் களவாடல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன. களவாடப்பட்டதைத் திரும்ப பெற்றபின் மீண்டும் அதைத் தக்க வைத்துக் கொள்ள என்ன தான் வழி? பலர் தங்கள் மின்னஞ்சல் கணக்கை களவு கொடுத்திருக்கலாம்!! ஆனால், அதனை மீட்ட பின், நம்மவர்கள் செய்யும் முதல் விடயம் கடவுச்சொல்லை (Password)  மாற்றுவது தான் !! அப்படியும், சில நேரங்களில் நமது கணக்கு மீண்டும் சூறையாடப்படுவது உண்டு. என்ன காரணம்? அதனைத் தடுக்க என்ன வழி? பொதுவாக, கொந்தர்கள் (Hackers) பலர் ஒரு கணக்கை அபகரித்த உடன் முதலில் செய்யும் விடயமே, கணக்கின் கடவுச்சொல் தொடர்புடைய விவரங்களை மாற்றுவது தான்!! எனவே, வெறும் கடவுச்சொல்லை மாற்றினால், அதனால் எந்த பயனும் இல்லை.. என்ன செய்வது???? கீழ்காணும் வழிமுறையை அப்படியே செய்யுங்கள்!! முதலில், உங்கள் கணக்கில் "கடவுச்சொல் மாற்றல் முகவர

இரு சூரியன்களுடன் ஒரு கோள்- விண்வெளி அதிசயம்

ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது, இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும் ? சற்று கற்பனை செய்து பாருங்கள்!! உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் ஒரு கோள் இருக்கிறது.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஒரு கற்பனை உண்மையாகிறது!!!! அமெரிக்காவில் உள்ள  நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்த ஒரு அதிசயத்தக்க உண்மை தான் இந்த கோள்!! கெப்லர் 16 B என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள், அருகருகில் இருக்கும் இரு சூரியன்களைச் சுற்றி வருகிறது. பாறைகளாலும், வாயுக்களாலும் நிரம்பியுள்ள அந்த கோள் கிட்டத்தட்ட சனிக்கிரகத்தின் அளவில் உள்ளது. அது இரு சூரியன்களையும் 10.4 கோடி கி.மீ தூரத்தில் இருந்து கொண்டு சுற்றுகிறது!!  (நம் வெள்ளி கிரகத்தின் தூரம்) கெப்லர் 16 B சுற்றி வரும் சூரியன்கள் நம் பகலவனின் அளவில் இல்லை. ஒரு சூரியன் சூரியனில் 20% எடையிலும், பெரிதொன்று 69% எடையிலும் உள்ளன. கெப்லர் 16 B அவை இரண்டையும் ஒரு முறை சுற்ற 229 நாட்

அமெரிக்கா

விமானம் தரையிரங்கியது ... ரகுவரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான் .. ரகுவரன் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை புரிபவன் . கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான் .. நினைத்தது போலவே வெளியே அவன் நண்பன் சங்கர் அவன் வரவை எதிர்பார்த்து இருந்தான் ... விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் சங்கரின் காரில் ஏறி புறப்பட்டனர் . ************************************* வழியில் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic signal) குறுக்கிட்டது .. சிவப்பு ஒளி ஒளிர்ந்தும் பைக்கில் வந்த ஒருவன் முந்திக்கொண்டு சென்றான் " என்ன இது ! மக்கள் ரூல்ஸ மதிக்கவே மாட்டேங்கிறாங்க ! அமெரிக்கால எல்லாரும் ரூல்ஸ மதிக்கிறதால தான் அங்க டிராபிக் சீரா இருக்கு " என்றான் ரகுவரன் . சங்கர் புன்னகைத்தான் ************************************* " உன்கிட்ட தான் டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கே !! அப்புறம் , எதுக்கு அந்த போலிஸ்க்கு நூறு ரூபா கொடுத்த ? அமெரிக்கால யாரும் இப்படி கேக்க மாட்டாங்க ! உன்கிட்ட சரியா இல

தம்பிக்கு எந்த ஊரு?

நான் எனது பணியில் சேர்ந்த புதிது!!! அன்று ஏதோ பணி காரணமாக வேறொரு புதிய களத்திற்கு (அப்போது)செல்ல நேர்ந்தது!! புதிய களம்.. நான் உள்ளே நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அறியாமல் மிரள மிரள விழித்து கொண்டு இருந்தேன்.. என்னை நோக்கி ஒருவர் வந்தார்.. "தம்பி.. இங்க எல்லாம் அனுமதி (Permission) இல்லாம வர கூடாது! நீங்க யார்?" என்று கேட்டார்.. நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. நான் வந்த நோக்கத்தையும் கூறினேன். அவர் "அப்படியா!! சார் மேனேஜரைப் பார்க்க போய் இருக்கார். கொஞ்ச நேரத்தில வந்து விடுவார்" என்றார்..  சிறிது நேர மெளனத்திற்குப் பின், அவர் என்னைப் பார்த்து "உங்களுக்கு எந்த ஊரு?" என்று கேட்டார்... நான் புதியவன் என்பதால், பலரும் என்னைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.. நான் "திருச்சி" என்று பதிலளித்தேன்.   அவர் உடனே கேட்டார்: "அப்படியா!!! திருச்சியில் எங்கே?" "வயலூர் பக்கம்"  "அடடே!! அங்க எங்கே?" எனக்கு உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது... ! பார்க்க திருச்சிக்காரர் போல் தெரியாவிட்ட

அணைக்காமல் அணையுங்கள்!!!

நான் சொல்லப்போகும் செய்தி பலருக்குத் தெரிந்திருக்கலாம்... தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்திலேயே பதிவிடுகிறேன்!!  நீங்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பல இடங்களில் கீழ்காணும் சொற்தொடரைக் காணலாம்: பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாடுத் தளங்கள், தன்னியக்க வங்கி இயந்திரம், எரிபொருள் கிடங்குகள், எனப் பல இடங்களில் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்லி வற்புறுத்தும் வாசகங்கள் இருக்கும்!!! நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டி வந்தால், கண்டிப்பாக உங்கள் அலைபேசியை அணைக்க சொல்வார்கள்!!! ஏன் அவர்கள் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.... அலைபேசியில் பேசுவது பிறருக்கு இடையூராக இருக்கலாம் அலைபேசியின் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அங்கே உள்ள மின்னணு சாதனங்கள் சரி வர இயங்காமல் போகலாம்.. பிறருக்கு இடையூறாக இருக்கும் என்றால் அலைபேசியை அமைதி முறையில் வைப்போம் (Silent) அமைதி முறையில் அலைபேசி இருக்கும் போது, அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்தால் ஒலி மூலம் அறிவிப்பதற்கு பதிலாக அதி