முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படை எடுக்காத ஒரே நாடு (நம்பாதீங்க - பகுதி 9 )

நமது இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த பரப்பபடுகிறது:
இந்தியா என்கிற தேசம் தனது 10,000 ஆண்டு வரலாற்றில் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை
 இது உண்மையல்ல என்பதை சில வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர்.

உண்மை


பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின் மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்)..

மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்:
  • இராசராச சோழன் இலங்கையின் மீதும், மாலத்தீவின் மீதும் படையெடுத்து வெற்றி கண்டவன்
  • 'கடாரம் கொண்டான்' எனப் புகழ் பெற்ற இராசேந்திர சோழன் தற்போதைய மலேசியா (ஸ்ரீவிஜயம்), இந்தோனேசியா (இலாமுரி தேசம்) ஆகியவற்றின் மீது படையெடுத்து கைப்பற்றினான்.
ராஜேந்திர சோழன் ஆட்சிபரப்பு

இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர்களுக்கு:

1961 ஆம் ஆண்டு நடந்த கோவா இணைப்பை (Annexation of Goa - 1961) ஒரு படையெடுப்பே.

"ஆபரேசன் விஜய்" என்று அழைக்கப்பட்ட, ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த, அந்த போரின் காரணமாகவே போர்த்துகீய காலனிகளாய் இருந்த கோவா, டாமன், டையூரே ஆகியவை இந்தியாவுடன் இணைந்து இந்திய மண்ணில் இருந்து காலனியாதிக்கம் அன்று ஒழிந்தது!! அந்த போருக்குப் பிறகு காலனியாக்க அடிமைத்தனத்தில் இருந்து அந்த பகுதிகள் விடுதலைப் பெற்றன என்பது உண்மை தான்.

"Liberation of Goa" என்று நாம் சொன்னாலும், அந்த பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தமையால்,  அது ஒரு படையெடுப்பே!!!

நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்

அவிழ்மடல்

கருத்துகள்

  1. நண்பர்கள் சிலர் ஆட்சேபித்ததால், பின்னைய சில கருத்துகளை நீக்கி விட்டேன்.. மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  2. வேறொரு நாட்டின் மீது படையெடுக்காத நாடே கிடையாது!இந்திய மன்னர்கள் யாவரும் தன் படைப் பெருமை பேசவும் படையின் வேகத்தை சோதிக்கவும் படையெடுத்தனர் நல்லாட்ச்சிகள் நடத்தினர் கோயில் கலாச்சாரம் போன்றவற்றை அங்கு விதைகளாக ஊன்றினார்கள்! ஆனால் இந்தியாவின் மீது படையெடுத்தவர்கள் அனைவரும் கொள்ளையடிக்கவே படையெடுத்தனர்! மிகவும் அவர்களை மிரட்டியது நம் யானைப்படையே...ஒட்டகம் மட்டும் குதிரைகளை மட்டுமே பார்த்த முகலாய மன்னர்களுக்கு யானைப்படை சிம்ம சொப்பனமாக இருந்தது தைமூர் என்கிற கொடூர முகலாய மன்னனே யானைப்படைகளை வீழ்த்தினான் இரும்பு முள் உருண்டைகளை உருட்டிவிட்டான் அதை மிதித்த யானைகள் நடக்க முடியாமல் தினறின...ராஜபுத்திர மன்னர்களை வீழ்த்திய தைமூர் வெற்றி களிப்புடன் அனைத்து யானைகளையும் கட்டி அதன் மீது கொள்ளையடித்த பொன்னும் பொருளையும் வைத்து தன் நாட்டை நோக்கி புழுதி கிளம்ப சென்றான் அப்புழுதியடங்க பல நாட்கள் ஆனது! ஆதலால் தைமூரின் மதியே இந்தியா வீழக் காரணமாக இருந்தது...!

    பதிலளிநீக்கு
  3. வரலாற்று உண்மைகளை! ஆதாரத்துடன் பதிவிடும்போது உங்கள் மனசாட்சிபடி அதில் எந்த பொய்யும் இல்லை என தெளிவுடன் நீங்கள் பதிவிடும்போது யார் கூறினாலும் அதனுடைய பகுதிகளை நீக்குவது தவறு!

    இது என் கருத்து! யாருடைய பதிவிலும் அநாகரிகமான கருத்துகளை தவிர நீக்க சொல்லுவது கூடாது!அப்படி நீங்கள் நீக்கினால் நீங்களே தெளிவு பெறவில்லை என்று கருத வாய்ப்புள்ளது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... நிச்சயம் கடைபிடிப்பேன்!

      நீக்கு
    2. அந்த பகுதிகளை சிறிது மாற்றி சேர்த்து விட்டேன்!

      நீக்கு
  4. பெயரில்லா28 மே, 2012 அன்று AM 4:11

    //தைமூர் என்கிற கொடூர முகலாய மன்னனே யானைப்படைகளை வீழ்த்தினான் // He is not Mughal.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா28 மே, 2012 அன்று AM 10:45

    thanks for this article. informative one.

    nagu
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு
  6. இந்திய வரலாறென்பது தமிழக / திராவிட மன்னர்களைத்தவிர்த்ததான வரலாறு என்பதறிக..!! அது இன்றும் அப்படியே..!

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நாளாக எனக்கும் இது நெருடலாகவே இருந்தது .. உங்கள் பதிவு உண்மையை படம் பிடித்துக் காட்டி விட்டது. சிங்களவர்களின் வரலாற்றில் இந்தியா என்றாலே ( சோழர்கள் ) படையெடுப்பு செய்யும் நாடு என்று தான் அர்த்தப்பட்டு இருக்கின்றது .... !!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும