முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)

நண்பர் "கோவை நேரம்" ஜீவானந்தம் அவர்கள் தனது வலைப்பூவில் தான் வானில் கண்ட அதிசயம் பற்றி "வானில் ஓர் அதிசயம்  என்கிற பதிவில் எழுதியிருந்தார். 



அது என்ன அதிசயம்? எப்படி நிகழ்கிறது? இங்கு பார்ப்போம்!!
(அப்பாடா!! நாமளும் ஒரு பதிவு தேற்றியாச்சு)

இந்த நிகழ்வு பரிவேடம் (Halo) என்று அழைக்கப்படுகிறது!!ஒளிவட்டம் என்றும் சொல்லலாம்! இது 22 டிகிரி (22º) ஹாலோ ஆகும்.

இவை சூரியனில் மட்டுமல்ல, நிலவைச் சுற்றியும் வரும்.!! 



இது எப்படி ஏற்படுகிறது?

நமக்கு மேலே வானத்தில் சுமார் 5.5 கி.மீ உயரத்தில் உள்ள மேகங்கள்  மென்னடுக்கு முகில் (Cirrostratus cloud) என்று அழைக்கப்படுகிறன. இவை பெரும்பான்மையாக பனித்துளிகளால் ஆனவை. இவற்றை வெறும் கண்ணால் பார்ப்பது அரிது.


மேகங்களில் உள்ள பனிக்கட்டிகள் அனைத்தும் அறுகோண (Hexagon) வடிவில் இருக்கும். மேலும், அவை அனைத்தும் அடுக்கி வைத்தது போல ஒரே வரிசையில் இருக்காது!! ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு திசையில் இருக்கும். 


சூரியனின் ஒளிக்கதிர்கள் பனித்துகள்களின் மீது விழும் போது, அவை சூரிய ஒளியை திசை திருப்புகிறன (refraction). நாம் இந்த காட்சியைப் பார்ப்பதற்குக் காரணம் சூரிய ஒளியின் பாதைக்கு ஓரளவு  செங்குத்தாக இருக்கும் துகள்கள் தான்!!

ஒளிக்கதிர்கள் அவற்றின் வழியே போகும் போது, கதிர்கள் 21.7º - 50º  திரும்புகிறன. செங்குத்தான எல்லா படிகங்களின் ஒளியின் கீற்றே நமக்கு ஒளிவட்டமாக தெரிகிறது!!


பெரும்பாலான கதிர்கள் 21.7º திரும்புகிறன. சில வேறு கதிர்கள், துகளின் நிலையைப் 50º  வரை திரும்பும்.
எனவே, தான் உள் வளையம் (21.7º) மிகவும் பிரகாசமாகவும், வெளி வளையம் வெளிச்சம் குன்றியும் இருக்கிறது!

இன்னொரு விசயம் கவனித்தீர்களா?
வளையத்திற்கும் சூரியனுக்கும் இடையே இருட்டாக இருக்கிறது!!

அதன் காரணம், 21.7º கோணத்திற்குக் குறைவாக ஒளித்திருப்பல் இருக்காது (Refraction). ஒளி இல்லாத காரணத்தால் அந்த இடைவெளி இருட்டாக இருக்கிறது!!


டிஸ்கி:
1. அது என்னய்யா கணக்கு 21.7 டிகிரி (21.7º)
எல்லாம் இயற்பியல் தான்!!




பனித்துகளின் முறிவுக்குணகம் (Refracrive Index) n_prism = 1.31
காற்றின் முறிவுக்குணகம் n_medium= 1.00027
அறுகோணத்தின் ஒரு பக்கம் σ = 60º



இதில் உள்ளிட்டால், ஒளி திரும்பும் திசைக் கோணம் δ = 21.7º!!


2. நிலா ஹாலோக்கள் மழை வருகையைக் குறிப்பிடுகிறன. என்றாலும், அவை நம்மூர் வானிலை அறிக்கை போலத் தான்.. வரும்.. ஆனா, வராது!!  (உண்மையை 'நிலவ'ன்பனிடம் தான் கேட்கணும்)

3.  இதேபோல 46 டிகிரி, 90 டிகிரி ஹாலோக்களும் உண்டு.


நன்றி:


 "கோவை நேரம்" ஜீவானந்தம் அவர்கள் (பதிவின் கரு மற்றும் படம்)
Atmospheric Optics , HyperPhysics , Florida Unversity (படம்), Code Cogs (LaTeX)

அவிழ்மடல்

கருத்துகள்

  1. அப்துல் பாஸித் சொன்னது
    //எனக்கு Halo வீடியோ கேம் தான் தெரியும். இது புதிய தகவல். //

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க இது.. இங்க என்ன நடக்குது? :D

      நீக்கு
    2. வரலாற்று சுவடுகள்: ஹி..ஹி.. அவர் ஒரு தடவை சொன்னார். நான் இன்னொரு தடவை போஸ்ட் பண்ணேன்! :D

      நீக்கு
  2. அருமையான, எளிமையான விளக்கம்.. இப்போது ஒளிவட்டம் ஏற்படும் காரணம் என்ன என்பதை தெரிந்துகொண்டேன். பிறருக்கும் விளக்க முடியும்.

    பகிர்வினுக்கு நன்றி "ஆளுங்க" சார்..!

    பதிலளிநீக்கு
  3. ஆஹா...!உண்மை தெரிஞ்சிருச்சு.....!

    பதிலளிநீக்கு
  4. அந்த பதிவில் நான் ‘halo' பற்றிக் கூறினேன். நீங்கள் அதை மேலும் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளீர்கள். இப்பொழுது நன்றாக புரிந்தது. [எனக்கெல்லாம் படம் போட்டு விளக்கினால் தான் புரியும் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?]

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, எனக்கும் அப்படித் தான்!!
      படம் போட்டு விளக்கினால் நன்கு புரியும்!

      கருத்திற்கு நன்றி!

      நீக்கு
  5. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  6. Wow. Nice. Kovai neram parthen. Arumaiyaana vilakkam. Thx boss. Appadiye namma pakkamum konjam vangalen?
    http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. Wow. Nice. Kovai neram parthen. Arumaiyaana vilakkam. Thx boss. Appadiye namma pakkamum konjam vangalen?
    http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும