முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

 
நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா?
சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள்.

நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம்.

புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!)!!   

2011 ஜூலையில் நாசா தனது ஸ்பேஸ் ஷட்டில் (Space Shuttle) ஊர்திகளுக்கு ஓய்வளித்த பின்னர், விண்வெளித்துறையில் நாசாவின் ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக பலர் கருதினர். இதற்கு தனது செவ்வாய் பயணம் மூலம் நாசா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.


செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் (Mars Science Laboratory - MSL):
செவ்வாய் கிரகத்தினை உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதே செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் என்கிற திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக கியூரியோசிட்டி (Curisoity)என்கிற பெயரில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட  தரையுளவி (Rover) பயன்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் காலம் 686பூமி நாட்கள் ஆகும்.

திட்டத்தின் குறிக்கோள்கள் (Mission Objectives):


1. உயிர் வாழ்தகுமை சாத்தியக் கூறுகள் (Biological Potential) குறித்த ஆய்வு

  • கரிமச் சேர்மங்கள் (Organic Compounds) இருப்பு மற்றும் தன்மை குறித்த அலசல்
  • உயிர் வாழ்க்கைக்குத் தேவையான வேதியியல்  கூறுகளை ஆய்வு செய்தல் [கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், சல்பர்] 
  •  உயிர்கூறுகளின் இருப்பை (Bio-signatures of Life) அறிய முயலுதல் 
2.  செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்பம் (Climate) குறித்த ஆய்வு 
  • செவ்வாயின் காற்று மண்டலத்தின்  பரிணாம வளர்ச்சியினை (Evolution of Martian atmosphere) அலசுதல்
  • நீர் மற்றும் கரிம வாயு (Carbon di oxide) ஆகியவற்றின் தற்போதைய இருப்பு, பகிர்மானம் மற்றும் சுழற்சி முறை குறித்து ஆராய்தல்.
3. செவ்வாய் கிரகத்தின் நிலவியல் (Geology) குறித்த ஆய்வு

  •  செவ்வாயின் மேற்பரப்பின் வேதியியல் (Chemical), சம இயல் (Isotopic) மற்றும் கனிமவியல் (Minerology) பொதிவினைக் கண்டறிதல்
  • செவ்வாயில் உள்ள பாறை மற்றும் மண் உருவாகிய முறையினை அலசுதல்
4. மனித விண்வெளிப் பயணம் (Human Space Mission) குறித்த ஆய்வு
  • செவ்வாய் மேற்பரப்பின் கதிரியக்கத்தின் அகன்ற அலைக்கீற்றை (Broad Spectrum of Surface Radiation) குறித்த ஆய்வு

கியூரியோசிட்டி  தரையுளவி (Curisoity Rover):
  • உலகிலேயே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய தரை ஊர்தி (Rover)
  • 3 மீ நீளம் கொண்டது. மொத்த எடை 899 கிலோ
  • முதல் முறையாக சக்கரங்களைக் கொண்டே தரையிறக்கம் (Landing on Wheels)
  • செவ்வாயினை ஆய்வு செய்வதற்காக  10 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது
  • 6 தனி சக்கரங்களைக் கொண்ட ஸ்டியரிங் (இதன் மூலம் 360 டிகிரியும் சுழல முடியும்)
  • அணுசக்தி (Nuclear Power) மூலம் இயங்கும் கலன் 


ஏவுதல் (Launch) :
  • ஏவுதளம்: கேப் கேனவரல் வான்படைத் தளம், புளோரிடா  (Cape Canaveral Air Force Station, Florida)
  • ஏவுகலன்: Atlas V
  • ஏவப்பட்ட நாள்: 26 நவம்பர் 2011,  சர்வதேச நேரம் (GMT)  15:00  (இந்திய நேரப்படி 20:30 மணி)
  • ஏவப்படும் போது விண்கலனின் எடை (Space Craft mass at Launch): 3893 கிலோ 
பயணம் (Cruise):

விண்ணில் செலுத்தப்பட்ட MSL விண்கலன் செவ்வாயை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தது. 56.7 கோடி கிமீ தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

    நெருங்குதல் (Approach):
    2012 ஜூன் 22 அன்று விண்கலன் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்தது. செவ்வாயின் மையத்திலிருந்து 3500 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. தரையிறக்கத்திற்குத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்பட்டன


    நுழைவு மற்றும் தரையிறக்கம் (Entry, Descent and Landing):

    06 ஆகஸ்ட் 2012 அன்று விண்கலன் தனக்கு இடப்பட்ட முக்கிய பணியினைச் செய்தது.
      தான் சுமந்து வந்த கியூரியோசிட்டி  தரையுளவியினை (Curisoity Rover) பத்திரமாக செவ்வாய் கிரகத்தின் தரையில் இறக்கி விட்டது.
    இந்த செயல் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது:

    1. வழிப்படுத்தப்பட்ட நுழைவு (Guided Entry)
    2. வான்குடை இறக்கம் (Parachute Descent)
    3. ஏவுதல் மூலம் இறக்கம் (Powered Descent)
    4. வான் பளு தரையிறக்கம் (Sky Crane)

    விளக்கங்களுக்கு படத்தைப் பாருங்கள். மேம்பட்ட செயல் விளக்கம் (பெரிதாக்கிப் பார்க்கவும்):

    இதில் முக்கிய விடயம்...
    இதுவரை நாசா அனுப்பிய தரையுளவிகள் காற்றுப்பைகளின் (Airbags) துணை கொண்டு தரையிறக்கப்பட்டன.

    முதல் முறையாக,  ஊர்தியின் சக்கரங்களைக் கொண்டே தரையிறக்கம் (Landing on Wheels) செய்யப்பட்டதால், செயல் நடைபெற்ற 06:39 நிமிடங்களும் மிகப் பதட்டமானதாகவே கருதப்பட்டது.

    இறக்கத்தின் போது, செவ்வாய் கிரகத்தின் மீது படிந்த தனது நிழலைப் படமெடுத்த ஊர்தி:




    தரையைத் தொட தயார்!! (வரைபடம்)



    06 ஆகஸ்ட் 2012 சர்வதேச நேரம் 05:31 (இந்திய நேரப்படி 11:01 மணி) அன்று, கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில் (Gale Crater),  திட்டமிட்டப்படி வெற்றிகரமாக செவ்வாயின் மீது கால் பதித்தது Curiosity.



    இனி.........

    Curiosity இரண்டு வருடங்கள் செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வுகளைத் தொடரும். இதனால், புதிய கண்டறிதல்கள் நிகழுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

    கொசுறு:

    படத்தில் இருக்கும் 15 வயது சிறுமியின் பெயர் கிளாரா மா (Clara Ma). செவ்வாய் சென்ற Curisoity ஊர்திக்குப் பெயர் சூட்டியவர் இவர் தான்!!
    2009 ஆம் ஆண்டு நாசா நடத்திய பெயர் சூட்டல் போட்டியில் "Curiosity" என்கிற பெயரைப் பரிந்துரை செய்து பரிசைத் தட்டி சென்றவர்.
     தற்போது செவ்வாயில் இருக்கும் கலனில் இவரது பெயரும், கையொப்பமும் பொறிக்கப்பட்டுள்ளன. 
    குசும்பு:





    இடது பக்கம் இருப்பது சமீபத்தில் செம ஹிட்டடித்த "நான் ஈ" ..

    வலது பக்கம் இருப்பது?   செவ்வாய் குறித்த ஆய்வில் ஈடுபடும் நாசா விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வலர்களின் லோகோ (Mart-ஈ-an)!!

    'ஈ' சாரி.. இவற்றை ஒப்பிட்டு உங்கள் மனதில் எதுவும் தோன்றினால், அடியேன் பொறுப்பல்ல :D



    டிஸ்கி: 
    இன்னும் எழுத ஆசை தான். எனினும், பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன்.
    பதிவு மிகவும் நீண்டு போனதாக கருதினால் மன்னிக்கவும்!

    நன்றி:
    செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த புதிய அப்டேட்:

    கேல் எரிமலைப்பள்ளத்தாக்கு (Gale Crater)

    மவுண்ட் ஷார்ப் (Mount Sharp) [3.4 கிமீ உயரமான மலை]








    மேலும் பல படங்களைப் பெற தொடர்ந்து NASA - MSL Mission Page  பக்கத்தில் இணைந்திருங்கள்!!



    அவிழ்மடல்



    கருத்துகள்

    1. அறிவியல் என்றாலே ஒதுக்கி, மற்றப் பதிவுகளை படிக்கும் வழக்கம் உள்ளவர்கள் கூட இந்த பதிவைப் படிக்கும் விதத்தில் எளிமையாக எழுதியிருக்கிறீர்கள்..

      வானம் வசப்படுவதைப்போல, தங்களுக்கு அறிவியல் செய்திகள் அழகு தமிழில் வசப்பட்டிருக்கிறது.. வாழ்த்துகள் அன்பு நண்பரே..!

      பதிவில் நாசா விஞ்ஞானிகள் உருவாக்கிய கியூரியோசிட்டி தரையுளவி முதல், அதற்குப் பெயர் வைத்த பெண், இறுதியாக செவ்வாயில் தரையிறக்கம் செய்து சாதித்த தருணங்கள் அனைத்து தகவல்களையும் தொய்வில்லாமல் எழுதி, பதிவை நிறைவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்..

      கூடவே தாங்கள் ஒப்பிட்ட நான் ஈ படத்தையும் நாசா குழுவினரின் லோகோப் படத்தையும் காணும்போது எனக்கும் ஒரு எண்ணம் வந்து போனது. அதை இங்கே குறிப்பிடவில்லை..

      தங்கள் வலைத்தளத்திலுள்ள பதிவுகள் அனைத்தும் ஆசிரியர் முதல் மாணவர்கள் வரைஅனைவருக்கும் பயன்படும் விதத்தில் உள்ளது.. தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை பதியுங்கள்.. நன்றி.. வாழ்த்துகள்..!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி நண்பரே!!
        தங்களைப் போன்றவர்களின் ஊக்கமே எனது ஆக்கத்தின் காரணம்!

        நீக்கு
    2. அமர்க்களமான பகிர்வு...

      நண்பர் தங்கம் பழனி சொன்னது போல் விரிவான விளக்கம்...

      படங்கள் எல்லாம் அருமை... குறிப்பாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொண்டது... (மனிதனின் சாதனை அல்லவா ?)

      குசும்பு ரசித்தேன்...

      தொடர வாழ்த்துக்கள்... நன்றி (T.M. 3)

      பதிலளிநீக்கு
    3. ////சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர் நாசா விஞ்ஞானிகள்.///

      அப்போ, நாஸா விஞ்ஞானிகளுக்கே வழிகாட்டிய அப்துல் பாஸித்னு சொல்லுங்க...

      பதிலளிநீக்கு
    4. \\புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம்.\\ நீங்க இங்கே போட்டிருக்கும் படத்தைத் தவிர, Curiosity எடுத்த வேறெந்த படமோ, வீடியோவோ எங்கு தேடியும் கிடைக்கவில்லை, இருந்தால் தெரியப் படுத்துங்கள்.

      \\விண்ணில் செலுத்தப்பட்ட MSL விண்கலன் செவ்வாயை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தது. 24.8 கோடி கிமீ தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்தது.\\ இது பூமிக்கும், செவ்வாய்க்குமிடையேயான தற்போதைய shortest distance , உண்மையில் அது சூரியனைச் சுற்றிக் கொண்டு 50 கோடி கிலோமீட்டர்கள் பயணித்து செவ்வாயைச் சென்றடைந்ததாகச் சொல்கிறார்கள்.

      \\Curiosity இரண்டு வருடங்கள் செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வுகளைத் தொடரும். \\ ஒரு சந்தேகம், இது மூன்று மைல் உயரமுள்ள மலையை பாதி உயரம் வரை சென்று ஆராயும் என்கிறார்கள். மலை எப்படி இருக்கும்னு நமக்கே தெரியும், அவ்வாறு செல்லும் போது ஒருவேளை இடறி வீல்கள் மேலே இருக்கும் படி மல்லாக்க கவிழ்ந்து [Turtle ] விட்டால் என்ன நடக்கும், திரும்ப பழைய நிலைக்கு எப்படி வரும்?

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. //24.8 கோடி கிமீ //
        தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...
        56.7 கோடி என மாற்றி விட்டேன்!

        நீக்கு
      2. நண்பரே,

        தற்போது புதிதாய் இரண்டு படங்களைச் சேர்த்திருக்கிறேன். கியூரியோசிட்டி எடுக்கும் படங்கள் நாசாவினைச் சென்றடையும். அவர்கள் தணிக்கை செய்து வெளியிடும் படங்கள் மட்டுமே பொது மக்களின் பார்வைக்குக் கிடைக்கும்.
        தொடர்ந்து அப்டேட் பெற NASA - MSL Mission Page இல் இணைந்திருங்கள்! (இணைப்பு பதிவில்)

        நீக்கு
      3. //ஒருவேளை இடறி வீல்கள் மேலே இருக்கும் படி மல்லாக்க கவிழ்ந்து [Turtle ] விட்டால் என்ன நடக்கும், திரும்ப பழைய நிலைக்கு எப்படி வரும்?//

        அவ்வாறு நடக்க வாய்ப்பு மிக குறைவு.
        ரோவரின் ஒவ்வொரு சக்கரமும் தனித்தனி மோட்டார்களால் இயங்குகிறன. மேலும், முன் பக்கம், பின்பக்கம் என தனித்தனியே ஸ்டியரிங் உண்டு. இதன் மூலம் ரோவரால் 360 டிகிரியும் திரும்ப முடியும்.

        அதுமட்டுமன்றி, ரோவருக்கு சமநிலை (Balance) அளிக்கும் பொருட்டு Differential கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், சக்கரங்கள் எந்த நிலையில் இருந்தாலும், ரோவர் சமநிலையில் இருக்கும்.

        நீங்கள் சொல்வது போல் நடந்தால், முன்னால் உள்ள ஒரு சக்கரமோ, இரு சக்கரங்களோ தான் இடறும். இடறிய உடனேயே, ரோவர் அந்த நிலைக்கான சமநிலைக்கு வந்து விடும். எனவே, மல்லாக்க கவிழ வாய்ப்புகள் இல்லை.

        நீக்கு
    5. நல்லப் பதிவு. வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    6. இந்த தகவல்களை இத்தனை எளிமையாக ஒரு ஆசிரியர் விளக்குவது போல அருமையாக தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

      //தற்போது செவ்வாயில் இருக்கும் கலனில் இவரது பெயரும், கையொப்பமும் பொறிக்கப்பட்டுள்ளன.// "பெருமைப்படுத்தல்" என்பதற்கு சரியான உதாரனம்தானே!

      அறிய பல தகவல்களை, அழகான எழுத்துநடையில், எளிமையாக தொகுத்தளித்திருப்பது மிக மிக அருமையான செயல் நண்பரே! பகிர்வுக்கு நன்றி நண்பரே!

      பதிலளிநீக்கு
    7. எல்லோரும் புரியும் வகையில் எழுதியிருந்தமைக்கு மிகவும் நன்றி நண்பரே......

      பதிலளிநீக்கு
    8. அருணகிரி முருகையா8 ஆகஸ்ட், 2012 அன்று AM 9:37

      எல்லோரும் புரியும் தமிழில் எழுதியமைக்குநன்றி நண்பரே...படிக்க படிக்க ஆச்சரியம்..................................

      பதிலளிநீக்கு
    9. சூப்பர் பாஸ் நீங்க எவ்ளோ எழுதினாலும் நாங்க படிப்போம் தொடர் பதிவா போடுங்க தொடர வாழ்த்துக்கள்... நன்றி

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி நண்பரே...
        தற்போது எழுதும் "நம்பாதீங்க" தொடர் குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு அடுத்த தொடர் துவங்கலாம் என்று எண்ணியிருக்கிறேன்!

        நீக்கு
    10. //அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர் நாசா விஞ்ஞானிகள்.//

      அவ்வ்வ்வ்வ்...

      உங்களின் இந்த அருமையான பதிவில் என் மொக்கை பதிவை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே!

      Curiosity பற்றி விளக்கமாக உள்ளது.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. என்ன இருந்தாலும், எனது Starting Trouble க்கு தகுந்த கைகொடுத்தது பிளாகர் நண்பன் தான்!!

        செவ்வாய் என்றதுமே உடனே உங்கள் பதிவின் ஞாபகம் தான் முதலில் வந்தது!

        நீக்கு
    11. எளிமையான விளக்கம். நன்றி நண்பா.

      செவ்வாய்ல தண்ணி இருக்கோ, காத்து இருக்கோ. பேஸ்புக் இருக்கான்னு கேட்டு சொல்லுங்க :-)

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. என்னது? செவ்வாயில் பேஸ்புக் இல்லையா?
        நம்ம அப்துல் பாஸித் அங்க இருந்து அப்டேட் பண்ணாரே.. நீங்க கவனிக்கலையா?

        நீக்கு
    12. அறிவியல் தகவல் இப்படி ஆங்கிலத்தில் பகிரும் தளங்களை தான் பார்த்திருக்கிறேன் ..
      தமிழில் பகிர்ந்ததற்கு நன்றிகள்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி....
        "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்போம்" என்ற பாரதியின் கனவை நனவாக்க ஆசை..
        பார்ப்போம்!

        நீக்கு
    13. இதைப படித்த உடன் என் மனதில் தோன்றியதை எழுதலாம் என முயன்ற போது எனக்கு முன் எழுதியவர்களின் பின்னுாட்டம் படித்தேன் என் மனதில் ஓடியதை அவர்கள் எழுதி விட்டார்கள்.ஆனால் உங்களது எழுத்து என்னை எதையாவது எழுதச்சொல்கிறது.ஆதலால் தயவுசெய்து எனக்கு நேரம் கொடுங்கள்.
      வாழ்க வளமுடன்.
      SnR.DeVaDaSs

      பதிலளிநீக்கு
    14. நண்பரே, இன்று “எனக்கு பிடித்த வலைப்பூ” என்ற தலைப்பில் நண்பர் தங்கம் பழனி அவர்கள் தங்களின் தளத்தை பற்றி பதிவிட்டுள்ளார். அதைப் படித்துவுடன் தங்களின் “இப்படிக்கு” படித்து அசந்துவிட்டேன். நண்பர் குறிப்பிட்டுள்ளப்படி எளியநடையில் தாங்கள் கூறும் அறிவியல் கருத்துக்கள் அனைத்தும் அருமையிலும் அருமை. எனக்கும் பிடித்த வலைப்பூக்களில் தங்களின் அவிழ்மடலும் ஒன்றாகும்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி நண்பரே..
        தொடர்ந்து இணைந்திருங்கள்!

        நீக்கு
    15. இன்ஃபோக்ராபிக்ஸ்,தகவல்கள் எல்லாமெ சூப்பர்

      பதிலளிநீக்கு
    16. அருமை அருமை தேவையான பதிவு. தெளிவான விளக்கம். நன்று.


      இப்படித்தான் நண்பா கியுரியாசிட்டியின் பெருமைகளையும் நாசாவின் முயற்சிகளையும் வகுப்பில் விளக்கிவிட்டு... நாமும் தான் இருக்கிறோம்...


      இன்னும் நிலாவில பாட்டி தோசை சுட்டிட்டு இருக்கு என்று சொல்லி குழந்தைகளுக்குச் சோறூட்டிக்கொண்டு என்று சொன்னேன்..

      ஒரு மாணவருக்குக் கோபம் வந்துவிடடது..

      ஐயா... பாட்டி நிலாவில் தோசை சுடல.. வடைதான் சுட்டிட்டு இருக்காங்க என்று..

      நான் சொன்னேன் எத்தனை வருடமா அந்தப் பாட்டி வடையே சாப்பிட்டு இருப்பாங்க.. ஒரு மாற்றத்துக்கு அவங்களும் கொஞ்ச நாளைக்கு தோசை சாப்பிட்டக்கூடாதா என்று கேட்டேன்..


      மிகவும் பயனுள்ள பதிவு நண்பா.

      பதிலளிநீக்கு
    17. வான் பளு தூக்கி, மற்றும் சங்கரங்களினுடான தரையிறக்கம் நாசாவின் புதிய முயற்சி மற்றும் புதிய வளர்ச்சி. அருமையாக பட விளக்கத்துடன் கூடிய பதிவாக்கம் பாராட்டுகள். இந்திய வம்சாவளி இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பும் இதில் உள்ளது கவனிக்கத்தக்கது.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. கருத்திற்கு நன்றி நண்பரே!

        நீக்கு
      2. கலாகுமரன் சார் எதையும் கவனிச்சு வாசிப்பார் போலிருக்கே! :)

        நீக்கு
    18. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

      பதிலளிநீக்கு
    19. நன்றி! அருமையாக பட விளக்கத்துடன் கூடிய பதிவாக்கம்..

      பதிலளிநீக்கு

    கருத்துரையிடுக

    நீங்க என்ன சொல்றீங்க?

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

    மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

    வண்டி... வண்டி... ரயில் வண்டி

                 என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

    நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

    நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும