முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியூட்டனின் இயக்க விதிகள்

அறிவியல் படிக்கும் பலருக்கும் முதலில் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் நியூட்டனின் மூன்று விதிகள் தான்... விதிகள் எளிமை என்றாலும், அவற்றை நினைவில் கொள்வது மாணவர்களுக்குச் சற்று சிரமமான காரியம் தான்...
அவற்றை நினைவில் வைக்க எளிய வழியாய் உருவாக்கப்பட்டதே இந்த கதை!!
நியூட்டன் தன் மூன்று விதிகளையும் எப்படி கண்டுபிடித்து இருப்பார் என்பதனை இப்படி எல்லோருக்கும் எளிதாக புரியும் வண்ணம் சுருக்கமாக சொல்லலாம்
------------------------------------------------------------------------------- 
ஒரு மாடு நடந்து போய்கொண்டு இருந்தது. நியூட்டன் அதை நிறுத்தினார்..மாடும் நின்றது.
உடனே முதல் விதி உதயமானது
ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது
Every object continues in its state of rest, or of uniform motion in a straight line, unless compelled to change that state by external forces acted upon it


அதன் பிறகு தன் பலம் முழுவதையும் சேர்த்து மாட்டிற்கு ஒரு உதை கொடுத்தார் நியூட்டன்..மாடு மா (MA) என்று கதறியது..உடனே இரண்டாம் விதி பிறந்தது
பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும்
 The Change of Momentum is directly proportional to the Force Applied
(அல்லது)
The acceleration a of a body is parallel and directly proportional to the net force F acting on the body, is in the direction of the net force
F = M A

சிறிது நேரத்தில் தன் கோபம் அனைத்தையும் சேர்த்துவைத்து நியூட்டனை மாடு உதை உதையென்று உதைத்தது..உடனே மூன்றாம் விதி கருவுற்றது
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.
For Every action, there is an equal and opposite reaction
இப்ப மூன்று விதிகளையும் ஒரு முறை நினைத்து பாருங்க!!
எளிதில் புரிந்ததா?

நன்றி: முகநூல் நண்பர் Anand Satheesh S R


அவிழ்மடல்

கருத்துகள்

  1. இதை சுலபமா நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டிடம் சென்று உதை வாங்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டீர்களே அது வரை சந்தோசம்!

    எளிமையான விளக்கம் :-)

    பதிலளிநீக்கு
  2. சிறந்த எளிமையான விளக்கம்.
    வாழ்க வளமுடன்.
    SnR.DeVaDaSs

    பதிலளிநீக்கு
  3. நண்பரே உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள், முகவரி கீழே.

    http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_19.html

    பதிலளிநீக்கு
  4. அடடா! என்ன ஒரு விளக்கம்! அருமை!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    பதிலளிநீக்கு
  5. கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும