முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜூன் 2012 ஸ்பெ ஷல் (நம்பாதீங்க- பகுதி 10) June Special

வணக்கம் நண்பர்களே,

திருமண தேவதையான ஜூனோவின் பெயர் கொண்ட இந்த ஜூன் மாதத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஜூன் 2012 ஐப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கு.. தெரியுமா?

ஒரே மாதத்தில் 5 வெள்ளி, 5 சனி, 5 ஞாயிறு வந்தால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு அரிய சிறப்பைப் பெற்றது ஜூன் 2012 !! சந்தேகம் என்றால் நீங்களே காலண்டரைப் பாருங்க!


இந்த அரிய நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள். சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் !


என்னங்க? நிச்சயமா இது ஜூன் ஸ்பெ ஷல் தானே?

கொஞ்சம் இருங்க!!மேலே இருப்பது சுத்த அக்மார்க் பொய்!!


உண்மை:

இந்த செய்தியை மின்னஞ்சலில் பார்த்து எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியாது!!


முதலில், ஜூன் மாதத்தில் 30 நாட்கள் தான். இது நடக்க சாத்தியம் இல்லை. 

மே மாதம் பார்க்க:


அடுத்து, இந்த நிகழ்விற்காக (5 வெள்ளி, சனி, ஞாயிறு) 823 வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை.. மார்ச் 2013 வரை காத்திருந்தால் போதும்!!


அப்படியென்றால் மார்ச் 2013 இல் வரும் நிகழ்வு (5 வெள்ளி, சனி, ஞாயிறு) அபூர்வமானதா? அதுவும் கிடையாது!! 

இதற்கு முன்பு 5 வெள்ளி, சனி, ஞாயிறு வந்த மாதங்கள்: ஜனவரி 2010, அக்டோபர் 2010, சூலை 2011

அடுத்த வரவு:  மார்ச் 2013, ஆகஸ்ட் 2014

ஏப்ரலில் பண்ணவேண்டியதை யாரோ ஜூனில் பண்ணிட்டாங்க.. ஃபிரீயா விடுங்க!!


28 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலண்டர் மீண்டும் திரும்பிவருவது குறிப்பிடத்தக்கது..

ஒரு மாதத்தில் 3 நாட்கள் ஐந்து முறை வர அந்த மாதத்தில் 31 நாட்கள் இருக்க வேண்டும்.  மேலும், அந்த வாரத்தின் முதல் நாள் தான் அந்த 5 வது வாரத்தின் அடித்தளம்.

அதாவது, 5 வெள்ளி, சனி, ஞாயிறு வர அந்த மாதத்தின் முதல் நாள் வெள்ளியாக இருக்க வேண்டும் !

படங்கள் நன்றி: கூகிள்

பின் குறிப்பு:
சொன்னாலும், சொல்லாவிட்டாலும்,  இந்த ஜூன் 2012 ஒரு முக்கியமான மாதம் தான். இந்த மாதத்தில் நிகழும் ஒரு மிக முக்கியமான காட்சியை நீங்கள் தவற விட்டால், அதை மீண்டும் காண நீங்கள் குறைந்தபட்சம் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அது என்ன நிகழ்வு? அதைப் பற்றி அடுத்த பதிவில்!!!


நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்


அவிழ்மடல்

கருத்துகள்

  1. //நீங்க என்ன சொல்றீங்க?//

    நாங்க என்னத்தைச் சொல்றது... :)!!

    பதிலளிநீக்கு
  2. அடுத்த பதிவுக்கு 105 வருடங்கள் காத்திருக்க வேண்டாமல... ஹி.. ஹி... :):):) :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 105 மணி நேரம் கூடத் தேவையில்லை..
      இதோ: http://www.aalunga.in/2012/06/2012-venus-transit.html

      நீக்கு
  3. தெளிவான ஆதாரங்களுடன் விளக்கங்கள்... "நம்பாதீங்க" தொடரின் நோக்கத்தை சரியாகவே நிறைவேற்றும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே..
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!!

      நீக்கு
  4. பதில்கள்
    1. மெய்யாலுமே சொல்றீங்களா? இல்லை கலாய்க்குறீங்களா??
      நன்றி...

      நீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும