முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணல் மூட்டை- நகைச்சுவை




"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்"

இன்றைய இயந்திர வாழ்க்கையில், மன இறுக்கத்தைத் தீர்க்க உதவுவது நகைச்சுவை தான்..

நகைச்சுவையைக் கேட்டு சிரித்தால் மனம் லேசாகிவிடுகிறது..


படித்து மகிழுங்கள்!!

அந்த சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார்..
அண்டை நாட்டு அதிகாரி வந்தார்...




"என்னப்பா இருக்கு மூட்டையில?"
"வெறும் மணல் தான் சார்"
"நான் நம்ப மாட்டேன்"
" மெய்யாலுமே மணல் தான் சார்"



அதிகாரி நம்ப வில்லை.. மூட்டையை அங்கேயே பிரித்தார். மணல் தான் இருந்தது!!

பார்த்தும் நம்பிக்கை வரவில்லை. மணல் வடிவில் வேறு எதையும் கடத்தினால்?
மணல் ஆய்வகம் சென்றது!!
முடிவு அது "வெறும் மணல் தான்" என்று கூறியது!!

சர்தார்ஜி அண்டை நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாவம், ஆய்வு அது இது என்று அவர் கொண்டு வந்த மூட்டையில் பாதி மணலைக் காணோம்!!


சில நாட்கள் கழித்து மீண்டும் சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார். அதிகாரி வந்து சோதனை செய்தார்.. மணல் மூட்டை ஆய்வகம் சென்று "வெறும் மணல் தான்" என்று திரும்பியது!!
சர்தார்ஜி எல்லையைக் கடந்தார், பாதி மணல் மூட்டையுடன்!!

நாட்கள் சென்றன.. சர்தார்ஜி அடிக்கடி பயணம் செய்ய ஆரம்பித்தார். அதிகாரியின் சோதனையும் நிற்கவில்லை.. சர்தார்ஜியும் பாதி மணல் மூட்டையுடன் எல்லையைக் கடப்பார்.

நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடந்தன..
அதிகாரி ஓய்வு பெறும் நாள் வந்தது!!

சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார். அதிகாரி தன் கடமையைச் செய்து அவரை அனுமதித்தார்!!

இன்னும் சில வருடங்கள் கடந்தன..


ஒரு நாள் தற்செயலாக சர்தார்ஜியும் அண்டை நாட்டு அதிகாரியும் சந்தித்தனர்..

நீண்ட நாள் பழக்கம் அல்லவா? இருவரும் ஒரு உணவகம் சென்று அமர்ந்தனர்..

வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு அதிகாரி கேட்டார்:
"எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் உண்டு.. மணலில் பாதியை நாங்களே ஆய்வு என்கிற பெயரில் திருடி விடுகிறோம். மீதி மணலை வைத்து எப்படி பிழைப்பு நடத்துகிறீர்கள்?"

சர்தார்ஜி சொன்ன படிலைக் கேட்டு அதிகாரி திகைத்தார்:
"நான் என்ன மணலையா வித்தேன்...? லாரியைத் தானே!!"


கதை எப்படி?

பி.கு:
இது என் சொந்த கற்பனை அல்ல.. எங்கோ எப்போதோ படித்தது!!அதற்கு வேறு உருவம் கொடுத்து சொல்கிறேன்

கருத்துகள்

  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    //இது என் சொந்த கற்பனை அல்ல.. எங்கோ எப்போதோ படித்தது!!அதற்கு வேறு உருவம் கொடுத்து சொல்கிறேன் //
    இதைப் படிக்கவில்லையா நண்பரே??

    அந்த படத்தைக் கூட இப்படி நான் கேள்விப்பட்டதை மையப்படுத்தி எடுத்திருக்கலாம்.. நான் கேள்விப்பட்ட கதையில் பைக்!!
    அதைத் தமிழ் மன்றத்திலும் பதிவு செய்துள்ளேன்: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26183

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...