முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாசற்ற தீபாவளி கொண்டாடுவோம்

தீப ஒளித் திருநாள்..

பண்டைய காலத்தில் தீபங்களின் மூலம் ஒளியை வரவேற்ற நாள் இது. எனவே தான் "தீப ஒளி" என்று கொண்டாடத் துவங்கிய பண்டிகை இன்று தீபாவளி என்று மருவிக்கிடக்கிறது
(அசுரனை அழித்த பண்டிகை என்பதில் எனக்கு உடன்பாடில்லை!)






எந்த ஒரு நடைமுறை என்றாலும், சமகால மனிதருக்கும், வருங்காலச் சந்ததியினருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்றால், அந்நடைமுறைகளை மாற்றுவதில் தவறில்லை  அல்லவா!!

பண்டிகைகள் என்றாலே புத்தாடை அணிந்து பலகாரம் உண்டு பிறருடனும் பகிர்ந்து மகிழ வேண்டிய நாளன்றோ!!

தீப ஒளித்திருநாள் அன்றோ பலரும் பட்டாசுகளைக் கொளுத்தியும் நம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம்.

ஆனால், பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் தீங்கினை யாரும் யோசிப்பதில்லை..

பட்டாசுகள் தீபாவளி அன்று மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், அவற்றால் பின்னாளில் பல கேடுகள் காத்து இருக்கிறன.

பட்டாசில் கந்தகம், நைட்ரேட் போன்றவற்றுடன் காப்பர், மெர்க்குரி, அமோனியம் போன்ற உலோகங்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் சுவாசம் தொடர்புடைய பல நோய்கள் ஏற்படுகிறன.

பட்டாசு வெடிக்கையில் திடீரெனக் கேட்கும் அதீத ஒலி, கேட்கும் திறனைப் பாதிக்கலாம்.

பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் வெம்மை, புவி வெப்பமடைதலை அதிகரிக்கிறது.
மேலும், பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்றவை காற்றுமண்டலத்தை அசுத்தப்படுகின்றன. மழைப் பொழிவு பாதிக்கிறது.

பனிமலைகளில் மீது படியும் கார்பன் படிவங்கள், சூரிய ஒளியை எதிரொலிப்பதற்குப் பதில், கிரகிக்கின்றன. வெப்பத்தால், பனி உருகி கடல் நீர் மட்டம் உயர்கிறது. சங்கிலித் தொடர் விளைவாக உயிர்ச்சூழல் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

எனவே, நாம் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதன் மூலம் பல ஆண்டுகள் பூமியின் வளத்தைக் கெடுக்கிறோம்.. ஒரு நாள் மகிழ்ச்சிக்காக நிரந்த சூழல் கேட்டை உருவாக்குகிறோம்.


அது மட்டுமா??
நாம் ஒரு நாள் வெடிக்க பட்டாசு தயாரிப்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் பல நோய்களால் அவதியுற நேர்கிறது.

நமது அருகில் வசிக்கும் பிற உயிர்களும் பட்டாசுகளால் ஏற்படும் மாசாலும், சத்தத்தாலும் பாதிக்கப்படுகிறன!!





எனவே, தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்ப்போம். தீபாவளி என்ற பெயருக்கு ஏற்ப, வண்ணத் தீபங்களை வரிசையாக ஏற்றி மகிழ்வோம்.




இருளைப் போக்கவே ஒளி தேவைப்படுகிறது.
ஒரு மிகப்பெரிய அறையின் இருட்டைப்போக்க ஒரு சிறு துளி ஒளியே போதும்.

'அறியாமை' என்கிற இருளில் மூழ்கியுள்ள நாம் 'சுடர்' போன்ற ஒளியால் தெளிவு பெறுவோமாக!!



மாசற்ற தீபாவளி கொண்டாடுவோம்; மகிழ்ச்சியுடன் வாழ்வோம்

நன்றி: தினமலர், கூடல்.காம்

கருத்துகள்

  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. தீபாவளி நாளன்று 10% கூடியிருக்காம்.

    என்னதுன்னு கேட்கிறீங்களா, வேறென்ன காற்றில் கலந்துள்ள மாசின் அளவு.

    நரகாசுரனை வதம் செய்த நாளுன்னு சொல்லி இப்போ நரன்களை வதைக்க ஆரம்பிச்சுட்டோம்.

    பதிலளிநீக்கு
  3. //தீபாவளி நாளன்று 10% கூடியிருக்காம்.

    என்னதுன்னு கேட்கிறீங்களா, வேறென்ன காற்றில் கலந்துள்ள மாசின் அளவு. //

    இதற்குத் தான் ஆணியே புடுங்க வேண்டாம் என்பது போல் சொன்னேன்!

    நன்றி

    பதிலளிநீக்கு
  4. @மாணவன்:
    நன்றி நண்பரே...
    தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் (தாமதத்திற்கு மன்னிக்கவும்!!)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும