முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளே!







சில வருடங்களுக்கு முன்பு நடந்த கதை...

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்விற்குச் சில நாட்கள் முன்னர்..
அன்று தான் பள்ளியில் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு கொடுத்து இருந்தனர்.. பயபக்தியோடு என் அப்பாவிடம் கொடுத்தேன்...

"பரிட்சை ஹால் டிக்கெட்டா? நல்லது.. நல்லது... எல்லாரும் இந்த ஞாயிற்றுக் கிழமை நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் வேண்டிகிட்டு வருவோம்"

"
இல்லப்பா... ஸ்டடி லீவ் கொஞ்சம் நாள் தான் குடுத்து இருக்காங்க... படிக்கணும்"

"
பரவாயில்லைப்பா... நாம் காலையில சீக்கிரமா கிளம்பி போய்ட்டு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்"

"
இல்லப்பா.."

"அரை நாள் படிக்கலைனா ஒண்ணும் ஆகாது.. நீ தான் சில நாள் நைட் முழிச்சு படிப்பல? அப்படி படி"


அதற்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை...

"அப்பா... இந்த ஞாயிற்றுக் கிழமை சக்திமான் இருக்குப்பா... சக்திமானுக்கும், தன்ராஜ் கில்விஷருக்கும் சண்டைப்பா"



"அதானே பார்த்தேன் என்னடா பையன் படிப்பில ரொம்ப ஆர்வமா இருக்கான்னு... ஏண்டா சாமியை விட சக்திமான் உனக்கு அதிகமா மார்க் வாங்கி குடுத்துடுவாரா? "

"இல்லப்பா.. அது வந்து.."

"அதெல்லாம் கிடையாது.. நாம் எல்லாரும் போறோம்"

முடிந்தது.. எல்லாம் முடிந்தது.. இந்த வாரம் சக்திமானைப் பார்க்க முடியாது!!
நாம் சக்திமானுக்கு டிப்ஸ் குடுக்காமல் போவதினால் சக்திமான் தோற்று விட்டால்??
அய்யய்யோ... இருள் ஆரம்பித்து விடுமே!!!

குலதெய்வம் கோவில் என்றால் சும்மா நினைத்தவுடன் போய் விட முடியாது...
முசிறியில் இருந்து காலை 9 மணிக்கு பேருந்து.. ஏறினால், ஒரு மணி நேரம் பயணம்..
தவறவிட்டால், மதியம் தான் பேருந்து!!!

எப்படியாவது சக்திமானைக் காப்பாற்ற வேண்டும் என்கிற என் ஆசை நிராசையானது..

அன்று நான் படுக்கையில் புரண்டு புரண்டு தூங்குவது போல் நடித்தும் அப்பா எழுப்பி விட்டார்..

ஒரு வழியாக காலை 7.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, முசிறி வந்தாயிற்று..

"அப்பா.. வீட்டுக்குப் போலாம்பா...சக்திமான்.." என்றாள் என் தங்கை (எல்லாம் என் தூண்டுதலால் தான்)
அப்பா முறைத்தார்..

அதற்கப்புறம் எங்கே பேசுவது?

ஒருவழியாக குல தெய்வம் இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தோம்...

கோவிலுக்குள் நுழைந்து பூஜை செய்ய அனைத்து பொருட்களையும் அம்மாவும் தங்கையும் பரப்ப துவங்கினர்..

கண்களை மூடி சாமி கும்பிட முயன்றேன்..
கண் முன்னே  சக்திமான் தான் நின்றார்... கண்னைத் திறந்தால் தலையில் குட்டு விழும் என்பதால், கண்ணை மூடியபடியே நின்றேன்.

"தம்பி.. இந்த பரிட்சையில நல்லா மார்க் வரும்" என்று கூறிக்கொண்டே பூசாரி விபூதியை என் நெற்றியில் இட்டார்..
என் மனதிலோ அன்று சக்திமானுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பதைபதைப்பு!!

ஆனால், என் தங்கையைப் பாராட்ட வேண்டும்...
என்னை விட சிறியவள் ஆனாலும், சிறிது கூட ஆர்ப்பாட்டம் செய்யாமல், கடவுளை வணங்குவதிலேயே குறியாக இருந்தாள்..

என் அப்பாவும் அவளை மெச்சினார் "அந்த பிள்ளையைப் பாருடா. உன்ன விட சின்ன பொண்ணு.. எப்படி நல்ல பிள்ளையா நின்று சாமி கும்பிடறா.. நீயும் இருக்கியே"

ஒரு வழியாக சாமி கும்பிட்ட பின் வெளியே வர தயாரானோம்..
அப்பா அவர்களிடம் விடை பெற்றார்..


எப்படியோ.. திருச்சியை நோக்கி பயணம் மீண்டும் ஆரம்பமானது..

வழியில் தங்கையிடம் "சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?" என்று கேட்டேன்..

அவள் கூறிய பதிலைக் கேட்டு என் அப்பா சற்று அதிர்ந்து தான் போனார்:
"எப்படியாவது சக்திமானைக் காப்பாத்திடுங்கனு வேண்டிகிட்டேன்"




சரி..
அந்த தேர்வில் எத்தனை மதிப்பெண் வாங்கினேன் என்று கேட்கிறீர்களா?
அதையெல்லாம் ஏங்க திரும்பவும் கேட்குறீங்க? போங்க... போங்க...


கருத்துகள்

  1. சக்திமானைக் காப்பாற்றிய பக்திமான் (வேற யாரு உங்க அப்பாதான்)தலைப்பு நல்லாயிருக்குல்ல 10 எபிசோட் ஓட்டலாம்.

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...

    பதிலளிநீக்கு
  3. உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும் :-)

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html

    இனிய தீபாவள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும