முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?

ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும்.  அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!!
          
இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.



வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு: https://incometaxindiaefiling.gov.in/

1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கணக்கை எப்படி உருவாக்குவது?

  • தளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள்.
  • அடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு! (user id) )
  • அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க வேண்டும். கூடவே, மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
  • உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், அதனையும் பதிவு செய்யவும் (pfx file/ USB token) 
  • செய்து முடித்த பின், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் சென்று இணைப்பைச் சொடுக்கவும்.
  • உங்கள் கணக்கு தயார்!!
2. வருமான வரி தாக்கல் படிவத்தைத் தரவிறக்குங்கள்

  •  உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
  • மேலே உள்ள Downloads --> AY 2012-13 என்பதில் செல்லுங்கள்
  • தகுந்த படிவத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் (Excel Utility) . அருகில் இருக்கும் உதவிக் கோப்பையும் (Help Manual) ஐயும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்! 
 குறிப்பு: நீங்கள் செய்யப்போவது  தனிநபர் தாக்கல் (Individual) என்றால், மேலே கூறியதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைத் தரவிறக்கலாம்.
 3. விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள்.

இந்த Spread Sheet (Excel) படிவத்தில்Macro கள் மூலம் பல செயல்கள் நடப்பதால், Macro களைச் செயல்பாட்டில் (Enable Macro) வைக்கவும்.

  •  படிவத்தில் உள்ள தொடர்புடைய பச்சை நிறக்கட்டங்களை மட்டும் நிரப்பவும்.
  • ஒவ்வொரு பக்கத்தையும் (Sheet) நிரப்பிய பின்னர் Validate என்பதனைச் சொடுக்கி எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.
  • அதன் பின், அடுத்த பக்கம் (Sheet) செல்லவும்.
  • அனைத்தையும் உள்ளிட்ட பின்னர், முதல் பக்கம் வரவும். 
  • "Calculate Tax" என்பதனைச் சொடுக்கினால், படிவம் முழுதும் நிரப்பப்பட்டு விடும்.
  • அதன் பின், Generate XML என்பதனைச் சொடுக்கவும்
  • வரும் புதிய பக்கத்தில் "Save XML" என்பதனைச் சொடுக்கவும்
  • இப்போது உங்கள் தாக்கல் படிவத்தின் XML வடிவம் உங்கள் கணிணியில் இருக்கும்.
4. நிரப்பிய படிவத்தைத் தளத்தில் பதிவேற்றுங்கள்

  • உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
  • இடது பக்கத்தில் உள்ள "Submit Return" என்பதன் கீழே உள்ள Select Assessment Year --> AY 12-13 என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்
  •  வரும் பக்கத்தில், தகுந்த படிவ எண்ணைத் தேர்வு செய்யவும்.
  • உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், "Do you want to digitally Sign the file" என்பதில் Yes கொடுக்கவும். இல்லையேல், "No" கொடுக்கவும்.
  •  Digital Certificate இருப்பவர்கள் (Yes கொடுத்தவர்கள்) தொடர்புடையதைத் தேர்வு செய்யவும்.
  • அதன் பின் "Next" என்பதைச் சொடுக்கவும்
  •  வரும் பக்கத்தில், உங்கள் கணிணியில் சேமிக்கப்பட்ட XML கோப்பைப் பதிவேற்றுங்கள். 
  • தற்போது நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டீர்கள்!!
5. ஒப்புகை (Acknowledgement) பெறுங்கள்
இருங்க.. கடமை முடிந்து விட்டது எனக் கிளம்பாதீங்க!!
  • எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) கொடுத்தவர்கள் ஒப்புகை படிவத்தை (Acknowledgement Form)  சேமித்து/ அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள்
  • மற்றவர்கள் வந்த ஒப்புகை படிவத்தை (ITR-V) அச்சிட்டு, கீழ்காணும் முகவரிக்கு (120 நாட்களுக்குள்) அனுப்புங்கள். [அஞ்சல்/ விரைவு அஞ்சல் (Speed Post) மட்டுமே!] 
முகவரி:
Income Tax Department – CPC,
Post Bag No - 1, Electronic City Post Office,
Bengaluru - 560100, Karnataka

அனுப்புபவர்கள் ஒப்புகைப் படிவத்தில் கையொப்பம் இட மறந்து விடாதீர்கள்!!

நீங்கள் தாக்கல் செய்த உடன் வரும் பக்கத்திலேயே, ஒப்புகைப் படிவத்தின் இணைப்பு இருக்கும். தவற விட்டவர்கள், உங்கள் கணக்கில் மேல் தத்தலில் உள்ள My Accounts--> My Returns சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.

ஒப்புகைப் படிவம் கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டது.
கடவுச்சொல்: உங்கள் PAN எண்   பிறந்த நாள்
(இடையில் Space வராது)

என்ன நண்பர்களே, இனி எளிதாக உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்து விடலாம் தானே?

டிஸ்கி:
தாமதமாக பதிவிட்டமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும், இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால், பெருவாரியானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் பதிவிடுகிறேன்!!

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31!

படங்கள்: கூகிள் தேடல் மற்றும் கைமுறை (Self uploaded)


அவிழ்மடல்

கருத்துகள்

  1. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே !.... (த.ம. 3)

    பதிலளிநீக்கு
  2. எல்லாரும் அறிந்து கொள்ளவேண்டிய அருமையான தகவல் நன்றி நண்பா...!

    பதிலளிநீக்கு
  3. அனைவரும் அறிய வேண்டிய பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. //prem சொன்னது..//
    தேவையான பதிவு இப்போது தான் படித்தேன்

    பதிலளிநீக்கு
  5. படித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  6. நான் e-tax தான் returns submit செய்தேன். முதல் தடவை submit செய்தபோது சில தகவல்கள் கிடைக்கவில்லை, [வர இன்னும் ஒரு மாதம் கூட ஆகலாம்], எங்களுக்கு IT Dept லிருந்து கிடைக்க வேண்டிய தொகை இருப்பதால் 31 -ம் தேதியே submit செய்தேன். தகவல்கள் வந்த பிறகு revised IT returns submit செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதெப்படி என்று விசாரித்த போது, Return filed under section என்ற நிரலுக்கு எதிராக 315 என்று நிரப்பி Revised என்று அனுப்பச் சொன்னார்கள், ஆனால் இந்த cell Excel- லில் protect செய்யப்பட்டிருக்கிறது, அதில் எதையும் உள்ளீடு செய்ய முடியவில்லை. இதற்க்கு என்ன வழி, Revised returns எப்படி அனுப்புவது என்று தங்களுக்குத் தெரிந்தால் பதில் தரவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதனை இன்னும் எளிதாகச் செய்யலாம்..

      அந்த Filing Status பகுதியில் பாருங்கள்

      Return filed under section என்பதற்குக் கீழே உள்ள Drop Down Box ஐச் சொடுக்குங்கள். அதில் உள்ள 17-Revised 139(5) என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

      அடுத்து, "Whether original or revised return?" என்று ஒரு கேள்விக்கு அருகில் உள்ள "Original" என்பதைத் தொட்டால், ஒரு Dropdown Box வரும். அதில் "Revised" என்பதைத் தேர்வு செய்யவும்.

      இனி மற்றவற்றை வழக்கம் போல செய்யலாம்!!

      நீக்கு
    2. மிக்க நன்றி நண்பரே , நான் அந்த வரிசையிலேயே உள்ள அடுத்த செல்லில் இதைப் போட முயற்சி செய்து குழம்பி விட்டேன், [அவனும் குழப்புற மாதிரிதான் வச்சிருக்கான்!!]. தற்போது புரிந்து கொண்டேன், நன்றி.

      நீக்கு
    3. நல்லது நண்பரே..
      கியூரியோசிட்டி குறித்த உங்கள் கேள்விகளுக்கும் விடை சொல்லியிருக்கேன்.. பாருங்கள்!

      நீக்கு
  7. எதிர்காலத்தில் பயன்படும் நன்றி சகோ

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும