முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அணைக்காமல் அணையுங்கள்!!!





நான் சொல்லப்போகும் செய்தி பலருக்குத் தெரிந்திருக்கலாம்...
தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்திலேயே பதிவிடுகிறேன்!! 

நீங்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பல இடங்களில் கீழ்காணும் சொற்தொடரைக் காணலாம்:




பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாடுத் தளங்கள், தன்னியக்க வங்கி இயந்திரம், எரிபொருள் கிடங்குகள், எனப் பல இடங்களில் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்லி வற்புறுத்தும் வாசகங்கள் இருக்கும்!!!



நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டி வந்தால், கண்டிப்பாக உங்கள் அலைபேசியை அணைக்க சொல்வார்கள்!!!


ஏன் அவர்கள் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கண்டிப்பாக தெரிந்து இருக்கும்....

  • அலைபேசியில் பேசுவது பிறருக்கு இடையூராக இருக்கலாம்
  • அலைபேசியின் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அங்கே உள்ள மின்னணு சாதனங்கள் சரி வர இயங்காமல் போகலாம்..

பிறருக்கு இடையூறாக இருக்கும் என்றால் அலைபேசியை அமைதி முறையில் வைப்போம் (Silent)




அமைதி முறையில் அலைபேசி இருக்கும் போது, அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்தால் ஒலி மூலம் அறிவிப்பதற்கு பதிலாக அதிர்வுகள் மூலம் அறிவிக்கும் . இதன் மூலம், அலைபேசி வைத்து இருப்பவர் தகவல் அறிந்து கொண்டு வெளியே சென்று பேசி வரலாம்..

அதற்கான திட்டம் தான் இது!!!

ஆனால், எல்லா இடங்களிலும் இது பொருந்தாதே???
மின்னணு சாதனங்கள் உள்ள அறையில் என்ன செய்வது? 
அந்த அதிர்வுகள் கூட பிற சாதனங்கள் செயல்பட இடையூராக இருக்கலாம் அல்லவா?

அலைபேசியை அணைத்து விடுவது மட்டும் தான் ஒரே வழியா?


அது தேவை இல்லை!!
உங்கள் அலைபேசியை அணைக்காமலே அணைத்த மாதிரி செய்யலாம்

உங்கள் அலைபேசியில் "FLIGHT MODE" (சில அலைபேசிகளில் Offline Mode/ Airplane Mode) என்று இருக்கும்.. அதை இயக்குங்கள்!!!





நோக்கியா அலைபேசி:
Settings --> Profiles --> FLIGHT MODE
கருவிகள் --> சுய விவரங்கள் --> FLIGHT MODE

இப்போது திரையைப் பாருங்கள்!!
உங்கள் அலைபேசி சேவை சக்தி (Network Signal Strength ) மாயமாக போய் இருக்கும் !!



இந்த முறையில் நீங்கள் அலைபேசி சேவை சார்ந்த எந்த வேலையையும் செய்ய முடியாது.. எனவே, அதிர்வலைகள் கிளம்ப வாய்ப்பு இல்லை!!


ஆனால், பிறவற்றை (இசை, விளையாட்டு, நிழற்படம்,படக் கருவி) முதலியவற்றை எந்த தங்கு தடையும் இன்றி செய்யலாம்.. அவற்றால் எந்த பாதிப்பும் வராது!!

இசையைக் கேட்க தலையணி ஒலிவாங்கியைப் பயன்படுத்தவும் !! யாருக்கும் தொந்தரவாகவும் இருக்காது!!

அப்புறம் என்ன, இனி அலைபேசியை அணைக்காமலேயே அதை அணைத்து கொஞ்ச வேண்டியது தானே!!!

கருத்துகள்

  1. nalla karuththu nandri
    surendran
    surendranath1973@gmail.com

    பதிலளிநீக்கு
  2. ஏரொப்லேன் மோடு க்கு செட் செய்து மீண்டும் மாற்றிக்கொள்வதற்கு, அணைத்தே மீண்டும் துவக்கிக் கொள்ளலாமே !


    வீரராகவன்

    பதிலளிநீக்கு
  3. வீரராகவன் சார்,
    //ஏரொப்லேன் மோடு க்கு செட் செய்து மீண்டும் மாற்றிக்கொள்வதற்கு, அணைத்தே மீண்டும் துவக்கிக் கொள்ளலாமே !//

    அணைத்தால், இசை விரும்பிகள் பாடல் கேட்க முடியாதே!!
    அதே போல தான், புகைப்படம் எடுப்பது, விளையாடுதல் போன்றவை! அவற்றை மட்டும் செய்ய சேவை வசதி (Network) தேவையில்லையே!!

    பதிலளிநீக்கு
  4. பாஸ் என் ஃபோனில் அப்படி ஒண்ணும் காணல்லையே.
    ஒருவேளை ஏரோபிளேன் கண்டு பிடிக்கும் முன்னாடியே என் ஃபோனை கண்டு பிடிச்சுட்டாங்களோ?

    பதிலளிநீக்கு
  5. கெளதமன்
    வேறு ஏதாவது பெயரில் இருக்கும்..
    தேடிப் பாருங்கள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...