முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாமரையைக் காணவில்லை







ஆண்டு விடுமுறை!!

வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. ஏதாவது உருப்படியாக படிக்கலாம் என்று தோன்றியது.


"கம்ப்யூட்டர்ல எதாவது படித்தால் பின்னாளில் பயன்படும்" என்று அறிவுரை கூறினார்கள்!!


அப்போது கணிணி பரவலாக பிரபலமடைய துவங்கி இருந்த காலம்...
 எனது வீட்டின் அருகிலும் ஒரு கணிணி மையம் முளைத்து இருந்தது.
அங்கு சென்று எதாவது படிக்கலாம் என்று நினைத்தேன்..


"இங்க கம்ப்யூட்டர் சம்பந்தமாக நிறைய சொல்லிக் கொடுக்கிறோம்ங்க.. டாஸ்,  லோட்டஸ், வேர்ட் ஸ்டார்.." என்று அடுக்கிக் கொண்டே போனார் நிறுவனர் .

"இதில் எதைப் படித்தால் பின்னாளில் நல்ல எதிர்காலம்?" என்று அப்பாவியாய்க் கேட்டேன்!

"எதைப் படித்தாலும் உங்க எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்"

பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பு கணிணி பயிற்சியில் "டாஸ்" படித்து இருந்தேன்..

"லோட்டஸ் என்றால் என்ன சார்?"

"அது ஒரு ஸ்ப்ரெட் சீட் தம்பி. டேட்டா வச்சு நிறைய கணக்குகளை எளிதா போடலாம். நம்ம டேட்டாவை வச்சு கிராப் கூட வரையலாம்"

வேர்ட் ஸ்டார் என்பது தட்டச்சு செய்ய உதவும் ஒரு மென்பொருள் என்று சொல்லப்பட்டது!

'தட்டச்சு செய்வதற்கெல்லாம் பின்னாளில் கம்பியூட்டர் பயன்படாது.... அதனை வைத்து பெரிய பெரிய கணக்குகள் தான் போடுவார்கள்' என்று தோன்றியது.

"நான் லோட்டஸ் படிக்கிறேன்" என்று சேர்ந்தேன்!!

சேர்ந்த பின்னர் அதன் பெயர் Lotus 1-2-3 என்று அறிந்து கொண்டேன். முதலில் எளிமையான கணக்குகள் மூலம் துவங்கிய கற்றல் ஒரு மாதத்திற்குள் அதில் வல்லவனாக்கியது.

அந்த மென்பொருளில் எந்த பணியையும் செய்யும் திறம் வாய்த்தது !!


நான் மிகவும் பாடுபட்டு கற்ற மென்பொருள் ஆகையால், எனக்கு லோட்டஸின் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு..


ஒரு வருடம் கழிந்தது..
வேறொரு மையத்தில் சேர்ந்தேன்.. அங்கு எனக்கு விண்டோஸ் மற்றும் "MS Office" ஐ அறிமுகப்படுத்தினர். அதில் உள்ள வேர்ட், எக்சல், பவர்பாயிண்ட் என்று பலவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது!!

எக்சல் ஒரு ஸ்ப்ரெட் சீட் என்று சொல்லிய போது, எனக்கு உடனே லோட்டஸ் ஞாபகம் வந்தது.. எக்சல் அதற்கு இணையாக வருமா என்று தோன்றியது..

"இங்க லோட்டஸ் இருக்கா சார்?" என்று கேட்டேன்

"இல்ல தம்பி." என்று பதில் வந்தது.

நான் கற்ற மென்பொருள் இல்லை என்ற போது, வருத்தம் வந்தது. கூடவே, 'என்னடா.. லோட்டஸ் என்ற பெரிய சாப்ட்வேர் பற்றி தெரியாமல் இருக்கிறார்களே!!' என்று தோன்றியது

சில வருடங்களுக்குப் பின்..
கல்லூரியில் முதல் கணிணி வகுப்பு

"இங்க யாரெல்லாம் முன்னாடியே கம்ப்யூட்டர் படித்து இருக்கீங்க?"  என்று கேட்டார் கணிணி ஆசிரியர்.




கையை உயர்த்தியவர்களுள் நானும் ஒருவன்.


"உனக்கு என்ன தெரியும்?"

"சார்.. டாஸ், விண்டோஸ், ஆபிஸ்"

"இது நிறைய பேருக்குத் தெரியும். ஸ்பெஷலாக என்ன தெரியும்? "

"லோட்டஸ்" என்றேன்..

கையைத் தூக்கி இருந்த மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்!!

"அதெல்லாம் outdate ஆகிடுச்சுப்பா!! சரி.. உட்கார்!!"

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. அத்தனை வசதிகள் கொண்டிருந்த ஒரு மென்பொருள் எப்படி காலாவதி ஆகும்?

எப்படியாவது லோட்டஸ் பயன்படும் இடத்தைக் கண்டு பிடித்து அவரிடம் காட்ட வேண்டும் என்று தோன்றியது..
அன்றிலிருந்து காணும் அனைத்து கணிணிகளிலும் லோட்டஸ் இருக்கிறதா என்று தேடுவது ஒரு வேலையாகி விட்டது..

சில நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் வாங்கிய முதல் கணிணியைப் பற்றிய   பேச்சு வந்தது..

அதனை விவரிக்கும் போது ஒருவர் "அது ரொம்ப பெருசுங்க..  அதுக்காகவே ஒரு ஏசி ரூம் இருந்தது.. அதுல இருந்த வேர்ட் ஸ்டார்ல தான் ரிப்போர்ட் அடிப்போம்.. அப்புறம், கிராப் போட ஒண்ணு இருந்தது..ஆங்.. லோட்டஸ்!!'


என் புருவங்கள் உயர்ந்தது..

"அந்த கம்ப்யூட்டர் இப்ப எங்க இருக்கு சார்?"

"அது ரொம்ப பழசுங்க.. எல்லாத்தையும் தூக்கிட்டாங்க.. தெரியல"

வருடங்கள் பலவாகி விட்ட போதும்.....
இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்!!
இன்றும் நான் கற்ற 'தாமரையை" எங்கும் காணவில்லை!!








  1. ஏதோ அரசியல் பதிவோவென்று நினைத்தேன்!அப்புறம்தான் விளங்கியது.

    ஆரம்பகாலத்தில் எக்ஸெல் ஃபைல்களை லோட்டஸ் ஃபார்மெட்டிலும் சேமிக்க முடியும்.

    நன்றி, என் இளம்பிராய நினைவுகளையும் ஞாபகப்படுத்தியதற்கு .

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு!
    தாமரையை பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும