வாழ்க்கை எனும் ஓடம் தன் பயணத்தைத் தொடர்ந்த படியே உள்ளது. பயணம் செய்பவர்களைப் பற்றி என்றும் கவலைப்படுவதில்லை!!
பயணத்தின் வழிகளில் மென்மையான அலைகளின் தீண்டலும் உண்டு; அதே சமயம், மிகவும் ஆபத்தான புயல்களும் உண்டு. ஓடத்தில் இருப்பவர்கள் அவற்றால் பல்வேறு மனநிலைகளில் இருக்கலாம்.. ஆனால், ஓடம் அவை அனைத்தையும் கடந்து செல்கிறது. அவற்றைக் கடந்த சுவடுகளே சில சமயம் தெரிவதில்லை!
இந்த பயணத்தின் போது இனிய இன்பங்களும், கொடிய துன்பங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும், மறக்கக் கூடாத அனுபவங்களும் அனைவருக்கும் ஏற்படுகிறன. ஆனால், ஓடமோ அவற்றை சிறிதும் லட்சியம் செய்யாமல், தன் வழியில் சென்று கொண்டே இருக்கிறது..
சுற்றி நிகழும் நிகழ்வுகளின் தாக்கம் சற்று இருந்தாலும், வாழ்க்கை ஓடம் அவற்றால் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. தன் இலக்கை நோக்கிய அதன் பயணமும் முடிவதில்லை.
அதன் இலக்கை அறிந்து கொள்ள முயல்வது கடினம். அறிய முற்பட்டவர்கள் அறிய முடிந்தது இல்லை. அறிந்தவர்கள் யாரும் நம்மிடையே இல்லை. இலக்கின் தன்மையைப் பற்றி விவாதிப்பவர்கள் தான் உண்டு.
ஆனால், வாழ்க்கை எனும் ஓடம் விவாதங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதன் பயணம் தொடர்கிறது.
எனது வாழ்க்கை பயணமும் அப்படித் தான்!!
பயணத்தின் இலக்கை அடையும் வரை என் பயணமும் தொடரும்!!
பண்பாளர் அருண்,
பதிலளிநீக்குஉங்களின் வலைப்பூவில் கண்ட "பயணங்கள் முடிவதில்லை" ஒரு நல்ல பதிவு.
மேலும் பல பதிவுகள் வளர வாழ்த்துக்கள் !
அன்புடன்
வீரராகவன்