முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) திருடர்களைத் தவிர்ப்பது எப்படி? (நம்பாதீங்க - பகுதி 3)




நீங்கள் தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க முற்படும் போது, திருடர்கள் தாக்கினால் என்ன செய்வீர்கள்?
'அது தான் படித்திருக்கோமே.. ATM-இல் PIN எண்ணை உள்ளிடும் போது, அதை Reverse -இல் அடித்தால், உடனே போலீஸ்க்குத் தகவல் போகும். எளிதாகத் தப்பித்து விடலாம்! பிரச்சனை இல்லை ' என்று நினைக்கிறீர்களா?
அப்ப இது உங்களுக்குத் தான்!!






நம்பாதீங்க - பகுதி 3


இதைப் பற்றிய ஒரு மிக அருமையான புரட்டு உண்டு (தமிழாக்கம்):



நீங்கள் ஒரு தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க அறையின் உள்ளே நுழைகிறீர்கள்.. அப்போது, இரு திருடர்கள் உள்ளே புகுந்து உங்களைத் தாக்குகிறார்கள்.. பணம் கேட்டு உங்களை மிரட்டுகிறார்கள்.
என்ன செய்வது?

அவர்களிடம் தர்க்கம் செய்ய வேண்டாம்..

வழக்கம் போல் உங்கள் அட்டையைப் பயன்படுத்துங்கள்.. ஆனால், சங்கேத குறியீட்டு எண்ணைத் தலைகீழாக இடுங்கள்.
உ.தா: உங்கள் பின் எண் 1254 என்றால் 4521 என்று அழுத்துங்கள்..

நீங்கள் இப்படி திருப்பி எண்ணை இடும் போது, பணம் வழக்கம் போல் வெளிவரும்.. ஆனால், இயந்திரத்தில் சிக்கி கொண்டு வெளியே வராது.. என்ன முயற்சி செய்தாலும் பணம் வெளியே வராது!!
அதே சமயம், உங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு திருட்டு முயற்சி பற்றிய எச்சரிக்கை சென்று விடும்..

இந்த வசதி எல்லா ATM களிலும் உண்டு.. ஆபத்தையும், ஆபத்து சமயத்தில் உதவி பெறவும் இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது!!


உண்மை:


இதை யாராவது பரிசோதித்துப் பார்த்து இருக்கிறீர்களா?
இது ஒரு மிகப் பெரிய புரளி...


நீங்கள் திருப்பி அடித்தால், PIN NUMBER WRONG என்ற செய்தி வந்து மீண்டும் எண்ணைக் கேட்குமே தவிர, பணம் வராது!!
முயற்சி செய்யுங்கள்!!


இப்படி ஒரு முறையே நடைமுறையில் இல்லை..
உங்களுக்குக் காவல் துறையில் ஒரு நண்பர் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள்!!



1994 ஆம் ஆண்டு ஜோசப் சிங்கர்ட் என்பவர் , மேற்கூறிய திட்டம் உடைய ATM
மென்பொருளை உருவாக்கினார். அவர் பல வங்கிகளுக்கு அதைக் கொடுக்க முயன்றார்..
ஆனால், பலன் இல்லை..
எனவே, திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், செயலாக வில்லை..


திட்டம் செயலாகாமல் போக முக்கிய காரணங்கள்:


* இருவழியொக்கும் எண்களை (Palindromic Numbers) சங்கேத எண்ணாக வைக்க
முடியாது (உ.தா: 1221, 3333). இது வாடிக்கையாளர்கள் தங்கள் சங்கேத எண்ணைத்
தேர்வு செய்வதில் ஒரு தடையை (constraint) உருவாக்குகிறது


* ஒருவர் தவறாக எண்ணைத் திருப்பி அடித்தால் பொய் எச்சரிக்கை வரும்.


*  காவல் நிலையம் இயந்திரத்திற்கு மிக அருகில் இருக்க வேண்டும். இல்லையேல், திருடர்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனி காவலரை
நியமிப்பது நடைமுறைக்குச் சாத்தியம் அல்ல.


* திட்டம் அமலாக்கப்பட்டால், இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விழிப்பு ஊட்ட வேண்டும்..வாடிக்கையாளர்களுள் திருடர்கள் மறைந்திருக்க வாய்ப்பு உண்டு.


* திட்டம் அமலாக்கப்பட்டால், சில நாட்களில் திருடர்களுக்கும் இந்த விடயம் தெரிந்து விடும். அதன் பிறகு, இதில் உபயோகம் இல்லை.


ஆதாரம்: ஹோக்ஸ் லேயர் 


நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் வாசிக்க: நம்பாதீங்க!!






நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!

கருத்துகள்

  1. இதுல இப்படியெல்லாம் இருக்கா.. ? ஒரு விழிப்புணர்வு பதிவு.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அருண்..!!

    பதிலளிநீக்கு
  2. இறுதியாக உண்மை வெளிச்சமிடப்பட்டது

    பதிலளிநீக்கு
  3. படித்து கருத்து கூறிய தங்கம் பழனி, சரவண குமார் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ஒரு வேழை சரியான பின் இலக்கத்தை கொடுத்து விட்டு பணத்தை எடுக்கும் பொது பின் இலக்கத்தை தலைகீழாக அடிக்கச்சொல்லி இருக்கலாம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும