முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்! (உபுண்டு)


அண்மைக் காலங்களில், விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை.
 
லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3B போன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம்


ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டிலஸ் கோப்பு மேலாளர் (Nautilus File Manager) மூலம் இதை எளிதாகச் செய்யலாம் தெரியுமா?

எப்படி செய்வது?
  1. நாட்டிலஸ் மேலாளரில் மெனுப்பட்டியலில் உள்ள Go→Location என்பதற்குச் செல்லுங்கள்.
  1. தோன்றும் முகவரிப்பட்டையில் (Address bar), burn:/// என்று உள்ளிட்டு Enter விசையை அழுத்துங்கள்.
  1. உடனே, வட்டு உருவாக்கி (CD/DVD Creator) திறக்கும். அதில், தேவையான கோப்புகளை இடுங்கள்.
     
  1. கோப்புகளை இட்ட பின், “Write To Disc” என்பதைச் சொடுக்குங்கள்.
  1. திறக்கும் உரையாடல் பெட்டியில் (Dialog box), தகுந்த வட்டைத் தேர்வு செய்யுங்கள்.
    • வெற்று வட்டு எனில், Blank Disc என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
    • பிம்பமாக (Image) எழுத, Image File என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
    • ஏற்கனவே தரவு எழுதப்பட்ட வட்டு எனில், அதன் பெயரைத் தேர்வு செய்யுங்கள்.
  1. கொஞ்சம் பொறுங்க.. 'Burn' ஐ அழுத்திடாதீங்க!! அடுத்து, பண்புகளை மாற்ற 'Properties' பக்கம் செல்லுங்கள்.

     
  2. வரும் பக்கத்தில், பண்புகளைத் தகுந்தவாறு மாற்றுங்கள்.
    • எழுதும் வேகத்தை மாற்றலாம்.
    • மீண்டும் வட்டில் எழுதுவதற்கு வழிவகை செய்ய (Multi-seesion) , 'Leave the Disc Open' என்பதைத் தேர்ந்தெடுத்தல் அவசியம்.
  1. பண்புகளை மாற்றிய பின்னர், 'Burn' பொத்தானைச் சொடுக்குங்கள்.
  2. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வட்டு எனில், பழைய கோப்புகளை என்ன செய்வது என கேட்கும். அவற்றை வைத்திருக்க, 'Only Append' என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

     
  1. சில நிமிடங்களில், உங்கள் வட்டு தயாராகி விடும்!!
பின் குறிப்பு:
இந்த முறை மூலம், தரவு வட்டுகளை (Data Disc) மட்டுமே உருவாக்க இயலும். ஒலி, ஒளி வட்டுகளை ( Audio/ Video Disc) உருவாக்க முடியாது.
நன்றி:
Burning a Data CD/DVD with Nautilus , கேரி ரிக்மண்ட் (Gary Richmond), Free Software Magazine
CD/DVD creation with Nautilus, The Gnome Journal
கணியம் இதழுக்காக எழுதப்பட்டது.
அவிழ்மடல்

கருத்துகள்

  1. இணைந்து விட்டேன்..
    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. உபயோகமான பதிவு நண்பரே நன்றி...! நானும் முயர்ச்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. விளக்கமான பகிர்வுக்கு நன்றி...

    நண்பரே நலமா...? தங்களிடம் பேசி நீண்ட நாட்கள் ஆகி விட்டது...

    பதிலளிநீக்கு
  4. லினக்ஸ் பயனாளர்களுக்கான பயனுள்ள தகவல்.

    பதிலளிநீக்கு
  5. லினக்ஸ் பயன்படுத்தவேண்டும் என்ற ஆர்வம உள்ளது. ஆனால் முடியவில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும