"நான் யார்" என்ற கேள்விக்கு இன்று வரை என்னிடம் விடை இல்லை....
"நான்" என்கிற என்னை இந்த உலகம் இப்படித் தான் அழைக்கிறது: அருண்
என் பெற்றோர் எனக்கு இட்ட பெயர் இது!!
என் உற்ற நண்பர்கள் சிலர் தவிர பலர் என்னை அழைப்பதும் இந்த பெயரால் தான்...
ஆனால், "நான்" என்கிற நான் உண்மையில் யார்? விடை அறியேன்...
எனினும், தற்போது நான் புரிந்து கொண்ட நான் ...
உலக அரங்கில் பொறியியல் துறையில் ஒரு முத்திரை படைக்கும் "மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம்" கல்லணை உள்ள மாநகரில் பிறந்தவன்...
இன்று உலக அரங்கில் பொறியியல் துறையில் முத்திரை படைக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவன்.
சோழர்கள் கோலோச்சிய நகரில் பிறந்து, சேரர்கள் ஆண்ட பகுதியில் கல்வி பயின்று , இன்று பாண்டியர் பூமியில் பணிபுரிபவன்!!!
தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.
கணிணியையும் தமிழ் பேச வைப்பவன்!!
செந்தமிழ் மொழியினன் - பாரத நாட்டினன்
மேற்கூறியவற்றின் தொகுப்பு தான்...
நானாகிய நான்
"நான்" என்கிற என்னை இந்த உலகம் இப்படித் தான் அழைக்கிறது: அருண்
என் பெற்றோர் எனக்கு இட்ட பெயர் இது!!
என் உற்ற நண்பர்கள் சிலர் தவிர பலர் என்னை அழைப்பதும் இந்த பெயரால் தான்...
ஆனால், "நான்" என்கிற நான் உண்மையில் யார்? விடை அறியேன்...
எனினும், தற்போது நான் புரிந்து கொண்ட நான் ...
உலக அரங்கில் பொறியியல் துறையில் ஒரு முத்திரை படைக்கும் "மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம்" கல்லணை உள்ள மாநகரில் பிறந்தவன்...
இன்று உலக அரங்கில் பொறியியல் துறையில் முத்திரை படைக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவன்.
சோழர்கள் கோலோச்சிய நகரில் பிறந்து, சேரர்கள் ஆண்ட பகுதியில் கல்வி பயின்று , இன்று பாண்டியர் பூமியில் பணிபுரிபவன்!!!
தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.
கணிணியையும் தமிழ் பேச வைப்பவன்!!
செந்தமிழ் மொழியினன் - பாரத நாட்டினன்
மேற்கூறியவற்றின் தொகுப்பு தான்...
நானாகிய நான்
உங்கள் அன்புக்குரிய தோழன் ஆளுங்க என்கிற அருண் !!
